துப்பாக்கியா... சரவெடியா.. மும்பை தமிழனா?
விஜய் நடிக்கும் துப்பாக்கியின் தலைப்பு பிரச்சினை ஒன்பதாவது முறையாக ஒத்திவைப்புக்குப் போயிருக்கிறது சென்னை நீதிமன்றத்தில்.
இந்த போராட்டத்தில் துப்பாக்கி தரப்பு சோர்ந்து போயிருக்கிறது. மீண்டும் வரும் அக்டோபர் 3-ம் தேதிக்கு வழக்கு தள்ளிப் போயிருப்பதால், நவம்பர் 13-ம் தேதி ரிலீசாகவிருக்கும் இந்தப் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்று கருதும் தயாரிப்புத் தரப்பு, இரு மாற்றுத் தலைப்புகளை தேர்வு செய்து வைத்துள்ளதாம்.
அதில் ஒன்று சரவெடி. தீபாவளிக்கு வரும துப்பாக்கிக்கு சரியான மாற்றுத் தலைப்பு இதுதான் என்பது ஒரு தரப்பின் அபிப்பிராயம்.
இன்னொன்று மும்பைத் தமிழன். படம் முழுக்க மும்பையில் நடப்பதால், இந்தத் தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கும். எனவே இதையே வைக்கலாம் என்று இன்னொரு தரப்பு கூறுகிறதாம்.
அக்டோபர் 3-ம் தேதிக்கு மேலும் தடை நீடித்தால், அநேகமாக இந்த மாற்றுத் தலைப்புகளில் ஒன்றை சூட்டி, தீபாவளி களத்தில் இறக்கப் போகிறார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications
