Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியன் 2 விவகாரம்: அக்டோபருக்குள் முடிக்க முயற்சிக்கிறேன்.. லைகா வழக்கில் இயக்குநர் ஷங்கர் பதில்!
சென்னை: அக்டோபருக்குள் இந்தியன் 2 படத்தை முடித்து தர முயற்சிப்பதாக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். இதில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. சிவப்பு நிற சேலை.. நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்!
2019ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
கிரேன் சரிந்து விபத்து
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
அந்நியன் இந்தி ரீமேக்
இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், இந்தியன் 2 படப்பிடிப்பு மட்டும் தொடங்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் அந்நியன் இந்தி ரீமேக் பணியில் இறங்கியுள்ளார்.
தடை விதிக்க வேண்டும்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும் கூறியது.
ஹைகோர்ட் மறுப்பு
மேலும் இவ்வளவு செலவு செய்தும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகவும் லைகா நிறுவனம் தனது மனுவில் தெரிவித்திருந்தரது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இயக்குநர் ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது.
அக்டோபருக்குள் முடிக்க முயற்சி
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான இயக்குநர் ஷங்கர், ஜூலை மாதத்தில் இருந்து அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் ஃப்ரீயாக இருப்பதால் இந்தியன் 2 படத்தை அக்டோபருக்குள் முடித்து தர முயற்சிக்கிறேன்.
விவேக் நடித்த காட்சிகள்
நடிகர் விவேக் மறைவால் அவர் நடித்த காட்சிகளை வேறு நடிகரை வைத்து எடுக்க வேண்டியுள்ளது என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், நீதிமன்ற தலையீட்டால் இந்தியன் 2 படப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. லைகா நிறுவனமும் ஷங்கரும் கலந்து பேசி படப்பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என அறிவுறுத்தினர்.