Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புருஷன் முடியாது என்கிறார், மனைவி நடக்காது என்கிறார்: இது உதயநிதி வீட்டு கூத்து
Recommended Video
சென்னை: தலைப்பை பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா இடையே பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் ஒற்றுமையாக உள்ளார்கள்.
வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. தற்போது அவர் விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை எடுத்துள்ளார்.
இந்நிலையில் அவர் திரையுலகம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
முதல் படம்
பல முறை நிராகரிக்கப்பட்ட பிறகு எனக்கு வணக்கம் சென்னை மூலம் பிரேக் கிடைத்தது. என் ஸ்க்ரிப்ட்டை ஏற்றுக் கொண்டாலும், பெண், தயாரிப்பாளரின் மனைவி, அரசியல் பின்னணி இருப்பதால் இயக்குனர் ஆவது தாமதமானது.
காளி
காளி படம் முழுக்க சர்பிரைஸ் இருக்கும். ரசிகர்கள் நிச்சயம் ரசித்துப் பார்ப்பார்கள். விஜய் ஆண்டனியும், நானும் நண்பர்களாகிவிட்டோம். தயாரிப்பாளராக அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
தயாரிப்பாளர்
தயாரிப்பாளரின் மனைவி மற்றும் அரசியல் பின்னணி இருப்பதால் பிற தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவது எளிது. எங்களின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தை விட்டு மற்றவர்களை நான் ஏன் தயாரிக்குமாறு கூறுகிறேன் என்று பிறருக்கு சந்தேகம் எழுந்தது.
ஹீரோ
உதயநிதி ஸ்டாலினை நான் இயக்கலாம், இயக்காமலே போகலாம். எனக்கு தெரியவில்லை. என் அடுத்த படம் ரொமான்டிக் டிராமா ஆகும் என்று கிருத்திகா தெரிவித்துள்ளார்.
படம்
மனைவியின் இயக்கத்தில் நடிப்பீர்களா என்று முன்பு ஒரு பேட்டியில் உதயநிதியிடம் கேட்கப்பட்டது. கிருத்திகாவோ தான் கூறிய முதல் கதையில் தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். அதை கேட்ட உதயநிதியோ முடியாது முடியாது என்று கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.