Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
விஸ்வரூபத்துக்காக கடல் படத்தைக் காவு கொடுக்கத் தயாராகின்றன தியேட்டர்கள்?
விஸ்வரூபம் பெரும் சிக்கலைக் கடந்து ஒரு வழியாக வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கமல்ஹாசன் தரப்பு இறங்கியுள்ளது. படத்தில் 7 காட்சிகளை எடிட் செய்யும் பணிகளை கமல்ஹாசன் தரப்பு முடுக்கி விட்டுள்ளது. வெள்ளிக்கிழமை படம் திரைக்குவரலாம் என்று தெரிகிறது.
ஆனால் விஸ்வரூபம் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் அப்படம் திரையிடப்படுவதாக இருந்த பல தியேட்டர்களில் கடல் மற்றும் டேவிட் ஆகிய படங்களை திரையிட்டுள்ளனர். இதனால் விஸ்வரூபம் படத்திற்குத் தியேட்டர்கள் கிடைக்காது என்று முன்பு கூறப்பட்டது.
ஆனால் கடல் படம் சரியில்லை என்று ரிசல்ட் வெளியாக ஆரம்பித்திருப்பதால், அப்படத்தைத் தூக்கி விட்டு விஸ்வரூபம் படத்தைப் போடும் மன நிலைக்கு பெரும்பாலான தியேட்டர்கள் வந்துள்ளதாக புதிதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஸ்வரூபம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் அப்படி என்னதான் உள்ளது இப்படத்தில் என்ற எண்ணத்திலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர். எனவே படத்தில் சில காட்சிகளை ரத்து செய்தாலும் கூட படத்தில் என்னதான் சொல்லியுள்ளார் கமல் என்பதை அறியும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே படத்திற்கு பெரும் கூட்டம் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதை மனதில் வைத்தே கடல் படத்தை தூக்கி விட்டு விஸ்வரூபத்தைப் போட தியேட்டர் நிர்வாகங்கள் பல முடிவு செய்திருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.