Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
ஆபாச வீடியோவை பார்க்குமாறு கட்டாயப்படுத்தினார்... பிரபல நடன இயக்குனர் மீது பெண் பாலியல் புகார்
மும்பை: ஆபாச வீடியோவை பார்க்குமாறு தன்னைக் கட்டாயப்படுத்தியதாக, பெண் ஒருவர் பிரபல நடன இயக்குனர் மீது கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா.
சென்னையில் பிறந்த கணேஷ் ஆச்சார்யா, இப்போது இந்தி சினிமாவின் பிரபல நடன இயக்குனராக இருக்கிறார்.
பாஜிரோவ் மஸ்தானி
இவர், கேஜிஎப், பத்மாவத், சர்கார் 3, பாஜிரோவ் மஸ்தானி, ரங் தே பசந்தி உட்பட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். பல படங்களில் நடித்தும் உள்ளார். ஸ்வாமி, மனி ஹே தோ ஹனி ஹே, ஏஞ்சல், பீகாரி ஆகிய இந்தி படங்களை இயக்கியும் உள்ளார்.
மீ டு புகார்
நடிகை தனுஶ்ரீ தத்தா, நடிகர் நானே படகேர் மீது மீ டு புகார் கூறிய போது இவர் மீதும் புகார் கூறியிருந்தார். இது பரபரப்பாகி இருந்தது. அப்போது தனுஶ்ரீயின் புகாரை கணேஷ் ஆச்சரியா மறுத்திருந்தாலும் தனுஶ்ரீ அவரை பொய்யர் என்று கூறியிருந்தார்.
ஆபாச வீடியோ
இந்நிலையில், 33 வயது பெண் நடன கலைஞர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதில், தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கணேஷ் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் அவர் இந்தப் புகாரை கொடுத்துள்ளார்.
நடன இயக்குனர்
கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான், நடன கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருந்து கொண்டு நடன கலைஞர்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பதாக இவர் புகார் கூறியிருந்தார். இதை அவர் மறுத்திருந்த நிலையில் இப்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.