Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆபாச வீடியோவை பார்க்குமாறு கட்டாயப்படுத்தினார்... பிரபல நடன இயக்குனர் மீது பெண் பாலியல் புகார்
மும்பை: ஆபாச வீடியோவை பார்க்குமாறு தன்னைக் கட்டாயப்படுத்தியதாக, பெண் ஒருவர் பிரபல நடன இயக்குனர் மீது கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா.
சென்னையில் பிறந்த கணேஷ் ஆச்சார்யா, இப்போது இந்தி சினிமாவின் பிரபல நடன இயக்குனராக இருக்கிறார்.
பாஜிரோவ் மஸ்தானி
இவர், கேஜிஎப், பத்மாவத், சர்கார் 3, பாஜிரோவ் மஸ்தானி, ரங் தே பசந்தி உட்பட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். பல படங்களில் நடித்தும் உள்ளார். ஸ்வாமி, மனி ஹே தோ ஹனி ஹே, ஏஞ்சல், பீகாரி ஆகிய இந்தி படங்களை இயக்கியும் உள்ளார்.
மீ டு புகார்
நடிகை தனுஶ்ரீ தத்தா, நடிகர் நானே படகேர் மீது மீ டு புகார் கூறிய போது இவர் மீதும் புகார் கூறியிருந்தார். இது பரபரப்பாகி இருந்தது. அப்போது தனுஶ்ரீயின் புகாரை கணேஷ் ஆச்சரியா மறுத்திருந்தாலும் தனுஶ்ரீ அவரை பொய்யர் என்று கூறியிருந்தார்.
ஆபாச வீடியோ
இந்நிலையில், 33 வயது பெண் நடன கலைஞர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதில், தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கணேஷ் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் அவர் இந்தப் புகாரை கொடுத்துள்ளார்.
நடன இயக்குனர்
கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான், நடன கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருந்து கொண்டு நடன கலைஞர்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பதாக இவர் புகார் கூறியிருந்தார். இதை அவர் மறுத்திருந்த நிலையில் இப்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.