Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரபல டிவி நடிகர் மீது பலாத்கார புகார் தெரிவித்த பெண் கைது
மும்பை: நடிகர் கரண் ஓபராய் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் கரண் ஓபராய்(40) தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக 34 வயது பெண் ஒருவர் மும்பை போலீசில் புகார் அளித்தார்.
பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று கரண் மிரட்டியதாகவும் அந்த பெண் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் கரண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தாக்குதல்
கரணுடன் சேர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர்களோ அந்த பெண் பொய் சொல்வதாக தெரிவித்தனர். கரண் அந்த மாதிரி ஆள் இல்லை அந்த பெண் வேண்டும் என்றே அவரின் பெயரை கெடுக்க பொய் புகார் அளித்துள்ளார் என்று கூறினார்கள். இந்நிலையில் கரண் மீது தான் அளித்த புகாரை வாபஸ் பெறுமாறு கூறி இரண்டு பேர் தன்னை தாக்கியதாக அந்த பெண் போலீசாரிடம் மீண்டும் புகார் அளித்தார்.
மருத்துவர்கள்
நான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தார்கள். அப்படி நான் காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் என்னை தாக்கினார்கள். கரண் மீது அளித்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டினார்கள் என்றார் அந்த பெண்.
மிரட்டல்
கரண் மீதான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் உன் முகத்தில் ஆசிட் வீசுவோம் என்றும் மிரட்டினார்கள் என அந்த பெண் புகார் தெரிவித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இருவரும் புகார் அளித்த பெண்ணின் வழக்கறிஞரான அலி காசிப் கானின் தூரத்து உறவினர்கள் என்பதும், அவர் சொல்லித் தான் தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது.
கைது
போலீசார் வழக்கறிஞர் அலியை அழைத்து விசாரித்தபோது அந்த பெண் தான் கரணின் பெயரை கெடுக்க இப்படி ஒரு தாக்குதல் நடத்துமாறு தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து பொய் புகார் அளித்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.