Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுகிறார்கள்: ஒப்புக் கொண்ட பா. ரஞ்சித்
Recommended Video
சென்னை: சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுற விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம் பற. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் இயக்குரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய ரஞ்சித் கூறியதாவது,
ஒரேயொரு ட்வீட் போட்டு இந்த கார்த்திக் சுப்புராஜ் பட்ட பாடு இருக்கே...
சமுத்திரக்கனி
கண்ணகி, முருகேசனின் படுகொலை பற்றி படம் பேசியிருக்கிறது. அந்த படுகொலை பற்றி கேட்கும்போதே அழுகை வரும். அந்த அளவுக்கு மோசமான ஆணவக் கொலை. திமிர் கொலை என்றே கூறலாம். சமுத்திரக்கனிக்கு அம்பேத்கரின் பெயரை வைத்திருக்கிறார் கீரா. இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்த படம் வெற்றியடைய வேண்டிய தேவையும் உள்ளது. 2 தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தது முக்கியமானது.
சாதி
சினிமாவில் மாடல் உருவாக்குவது மிகவும் கஷ்டம். அனைத்து கமர்ஷியல் படங்களிலும் சாதி முரணை பற்றி, சாதிய பிரச்சனை பற்றிய விவாதத்தை வைக்க வேண்டிய சூழல்நிலை உருவாகியிருப்பதை வரவேற்கிறேன். இதை முக்கியமானதாக பார்க்கிறேன்.
பாலியல் சுரண்டல்
பெண்களுடைய குற்றச்சாட்டுகளை பற்றி மட்டுமே பார்க்கக் கூடாது. சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுற விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இல்லை என்று சொல்ல முடியாது. இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஸ்ரீரெட்டியோ, மற்றவர்களோ அந்த பிரச்சனையை ஆராய்வதன் மூலமாக அது உண்மையா, இல்லையா என்கிற அடுத்தக்கட்டத்திற்கு போகும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண் புகார் தெரிவிப்பதால் அவரை குற்றவாளியாக மாற்றுவது ரொம்ப ரொம்ப தப்பு. நான் அதை எதிர்க்கிறேன் என்றார் ரஞ்சித்.
சின்மயி
தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று சில நடிகைகள் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீரெட்டி, பாடகி சின்மயி உள்ளிட்டோர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். இந்நிலையில் ரஞ்சித் அவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.