Don't Miss!
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- News முதல் கட்ட லோக்சபா தேர்தல்: நாளை களம் காணும் 8 மத்திய அமைச்சர்கள், 3 மாஜி முதல்வர்கள் யார்?
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஜீன்ஸ் அணிந்து ஆண்கள் மனசைக் கெடுக்கிறார்களா? - யேசுதாஸுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்
திருவனந்தபுரம்: இந்தியப் பெண்கள் ஜுன்ஸ் அணிந்து ஆண்களின் மனதைக் கெடுக்கிறார்கள் என்று பிரபல பின்னணிப் பாடகர் கேஜே யேசுதாஸ் தெரிவித்துள்ள கருத்து பெண்கள் அமைப்புகள் மத்தியில் புயலைக் கிளப்பியுள்ளது.
பல மகளிர் அமைப்புகள் வெளிப்படையாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய யேசுதாஸ், "பெண்கள் ஜீன்ஸ் அணிந்து மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என்றார். எதை மறைத்து வைக்க வேண்டுமோ அதை மறைத்தே இருக்க வேண்டும்," என்றார்.
யேசுதாஸ் கருத்தைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் அமைப்பினர் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யேசுதாஸ் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெண்களிடையே எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
யேசுதாஸ் சிறந்த பாடகர்தான். அதற்காக பெண்களுக்கு எதிராக அவர் இஷ்டத்துக்கும் கருத்து தெரிவிப்பதை ஏற்பதற்கில்லை என்று மகளிர் அமைப்பு தலைவி பிந்து மாதவி தெரிவித்தார்.