twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜீன்ஸ் அணிந்து ஆண்கள் மனசைக் கெடுக்கிறார்களா? - யேசுதாஸுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்

    By Shankar
    |

    திருவனந்தபுரம்: இந்தியப் பெண்கள் ஜுன்ஸ் அணிந்து ஆண்களின் மனதைக் கெடுக்கிறார்கள் என்று பிரபல பின்னணிப் பாடகர் கேஜே யேசுதாஸ் தெரிவித்துள்ள கருத்து பெண்கள் அமைப்புகள் மத்தியில் புயலைக் கிளப்பியுள்ளது.

    பல மகளிர் அமைப்புகள் வெளிப்படையாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய யேசுதாஸ், "பெண்கள் ஜீன்ஸ் அணிந்து மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என்றார். எதை மறைத்து வைக்க வேண்டுமோ அதை மறைத்தே இருக்க வேண்டும்," என்றார்.

    Women organisdations strongly condemn Yesudas

    யேசுதாஸ் கருத்தைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் அமைப்பினர் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யேசுதாஸ் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெண்களிடையே எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    யேசுதாஸ் சிறந்த பாடகர்தான். அதற்காக பெண்களுக்கு எதிராக அவர் இஷ்டத்துக்கும் கருத்து தெரிவிப்பதை ஏற்பதற்கில்லை என்று மகளிர் அமைப்பு தலைவி பிந்து மாதவி தெரிவித்தார்.

    English summary
    Music legend K.J. Yesudas has sparked a row, resenting women wearing jeans. He said on Thursday this went against Indian culture. His comment has sparked a new controversy among mahila organisations.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X