Don't Miss!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'வாடி ராசாத்தீ-ன்னு கொண்டாடின வாய்களை போம்மா ராசாத்தீன்னு சொல்ல வச்சிட்டீங்களே!'
Recommended Video
வலையுலகில் இன்றை பரபரப்பு டாபிக் நாச்சியார் டீசரை உருவாக்கிய பாலாவும் , தே... பயலுக வசனத்தை உச்சரித்த ஜோதிகாவும்தான்.
அது எப்படி அந்த வார்த்தையை ஜோதிகா உச்சரிக்கலாம்? இரு குழந்தைகளுக்கு தாயான ஒருவர், என்னதான் சினிமாவாகவே இருந்தாலும் இப்படிப்பட்ட வார்ததையைப் பேசலாமா?
ஒரு பெண்ணே இன்னொரு தாயை அவமதிக்கும் செயலல்லவா... இதற்கு எப்படி சென்சாரில் அனுமதி அளித்தார்கள் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கு முன் பல படங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நாயகன் படத்தில் கமல் ஹாஸன் இதே வார்த்தையை உச்சரித்தபோது பலருக்கும் ஷாக். ஆனால் தணிக்கைத் துறை காட்சியின் தன்மை கருதி அனுமதித்தது. இன்னொன்று அது ஹீரோ உச்சரித்தது.
ஆனால் இதில் பெண்ணே இன்னொரு பெண்ணை தே...யா என்று திட்டுவதை பலராலும் ஜீரணிக்க முடியவில்லை.
ஜோதிகா 12 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படத்தில் நடிக்க வந்தபோது, அவரை வாடி ராசாத்தீ என மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் தாய்மார்கள். அடுத்து அவர் நடித்த மகளிர் மட்டும் படத்துக்கும் பெண்கள் ஆதரவு கிடைத்தது. இப்போது நாச்சியார் படத்தில் அவர் பாத்திரம் என்னவாக இருந்தாலும், இந்த தே..யா பயலுங்க டயலாக்கால் பெண்கள் மத்தியில் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டுள்ளார். வாடி ராசாத்தீ என கொண்டாடிய வாய்கள் இப்போது, போதும் போம்மா ராசாத்தீ என்று கூறும் அளவுக்குப் போய்விட்டது.
இந்த வசனத்துக்கு சூர்யாவும், சிவகுமார் குடும்பமும் எப்படிச் சம்மதித்தனர் என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.