Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
'வாடி ராசாத்தீ-ன்னு கொண்டாடின வாய்களை போம்மா ராசாத்தீன்னு சொல்ல வச்சிட்டீங்களே!'
Recommended Video
வலையுலகில் இன்றை பரபரப்பு டாபிக் நாச்சியார் டீசரை உருவாக்கிய பாலாவும் , தே... பயலுக வசனத்தை உச்சரித்த ஜோதிகாவும்தான்.
அது எப்படி அந்த வார்த்தையை ஜோதிகா உச்சரிக்கலாம்? இரு குழந்தைகளுக்கு தாயான ஒருவர், என்னதான் சினிமாவாகவே இருந்தாலும் இப்படிப்பட்ட வார்ததையைப் பேசலாமா?
ஒரு பெண்ணே இன்னொரு தாயை அவமதிக்கும் செயலல்லவா... இதற்கு எப்படி சென்சாரில் அனுமதி அளித்தார்கள் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கு முன் பல படங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நாயகன் படத்தில் கமல் ஹாஸன் இதே வார்த்தையை உச்சரித்தபோது பலருக்கும் ஷாக். ஆனால் தணிக்கைத் துறை காட்சியின் தன்மை கருதி அனுமதித்தது. இன்னொன்று அது ஹீரோ உச்சரித்தது.
ஆனால் இதில் பெண்ணே இன்னொரு பெண்ணை தே...யா என்று திட்டுவதை பலராலும் ஜீரணிக்க முடியவில்லை.
ஜோதிகா 12 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படத்தில் நடிக்க வந்தபோது, அவரை வாடி ராசாத்தீ என மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் தாய்மார்கள். அடுத்து அவர் நடித்த மகளிர் மட்டும் படத்துக்கும் பெண்கள் ஆதரவு கிடைத்தது. இப்போது நாச்சியார் படத்தில் அவர் பாத்திரம் என்னவாக இருந்தாலும், இந்த தே..யா பயலுங்க டயலாக்கால் பெண்கள் மத்தியில் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டுள்ளார். வாடி ராசாத்தீ என கொண்டாடிய வாய்கள் இப்போது, போதும் போம்மா ராசாத்தீ என்று கூறும் அளவுக்குப் போய்விட்டது.
இந்த வசனத்துக்கு சூர்யாவும், சிவகுமார் குடும்பமும் எப்படிச் சம்மதித்தனர் என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.