Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உண்மையை சொன்னேன், மன்னிப்பு கேட்க முடியாது: நயன்தாரா பற்றி ராதாரவி
Recommended Video
சென்னை: நயன்தாரா விஷயத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.
எனக்கு இன்னொரு முகம் இருக்கு குறும்பட விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். படம் பற்றி பேசிய அவர் நயன்தாரா விவகாரம் குறித்தும் பேசினார்.
அது குறித்து அவர் பேசியதாவது,
எம்.ஜி.ஆர். தடவியதில் என்ன தப்பு, நான் சொல்லிக்காட்டியதில் என்ன தப்பு?: கஸ்தூரி
இயக்குநர்
நான் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன். அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. பயம் என்பது எங்கள் குடும்பத்திலேயே யாருக்கும் கிடையாது.
உண்மை
இன்று என் பேச்சை கேட்டு மீடியாவும், பார்வையாளர்களும் கை தட்டுகிறார்கள். கொலையுதிர்காலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலும் அப்படித் தான் நடந்தது. உண்மையை சொன்னால் ஆதரிக்கிறார்கள். நான் இனி படங்களில் நடிக்க முடியாது என்றார்கள். படம் இல்லை என்றால் நாடகங்கள், டிவி சீரியல்களில் நடிப்பேன். நான் நடித்துக் கொண்டே இருப்பேன்.
முடியாது
அதிகமாக பேசினால் தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எல்லாம் நான் கேட்க மாட்டேன். நான் அப்ப பேசினதுக்கே சொன்னேன், யாராவது மனவருத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் நான் மனவருத்தப்பட்டேன் என்று சொல்லச் சொன்னேன். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. எதுக்கு மன்னிப்பு கேட்கணும். என்ன கொலை குற்றமா பண்ணிட்டேன்?
சந்தை
இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. நான் பேசுவதில் உண்மை இருக்கா, இல்லையா?. உண்மை இருந்தால் ஏத்துக்கோ, இல்லை என்றால் விட்டுடு என்றேன். ஏனென்றால் இது சந்தை. சந்தையில் பாகற்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய் விற்கும். பாகற்காய் கசக்கும் ஆனால் உடம்புக்கு நல்லது. அதை விற்காதே என்று சொல்ல உனக்கு உரிமை கிடையாது. நீ வாங்காமல் போ. நான் நிறைய பேசுகிறேன் என்றால் நான் நிறைய படிப்பேன் என்றார் ராதாரவி.