Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
உண்மையை சொன்னேன், மன்னிப்பு கேட்க முடியாது: நயன்தாரா பற்றி ராதாரவி
Recommended Video
சென்னை: நயன்தாரா விஷயத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.
எனக்கு இன்னொரு முகம் இருக்கு குறும்பட விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். படம் பற்றி பேசிய அவர் நயன்தாரா விவகாரம் குறித்தும் பேசினார்.
அது குறித்து அவர் பேசியதாவது,
எம்.ஜி.ஆர். தடவியதில் என்ன தப்பு, நான் சொல்லிக்காட்டியதில் என்ன தப்பு?: கஸ்தூரி
இயக்குநர்
நான் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன். அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. பயம் என்பது எங்கள் குடும்பத்திலேயே யாருக்கும் கிடையாது.
உண்மை
இன்று என் பேச்சை கேட்டு மீடியாவும், பார்வையாளர்களும் கை தட்டுகிறார்கள். கொலையுதிர்காலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலும் அப்படித் தான் நடந்தது. உண்மையை சொன்னால் ஆதரிக்கிறார்கள். நான் இனி படங்களில் நடிக்க முடியாது என்றார்கள். படம் இல்லை என்றால் நாடகங்கள், டிவி சீரியல்களில் நடிப்பேன். நான் நடித்துக் கொண்டே இருப்பேன்.
முடியாது
அதிகமாக பேசினால் தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எல்லாம் நான் கேட்க மாட்டேன். நான் அப்ப பேசினதுக்கே சொன்னேன், யாராவது மனவருத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் நான் மனவருத்தப்பட்டேன் என்று சொல்லச் சொன்னேன். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. எதுக்கு மன்னிப்பு கேட்கணும். என்ன கொலை குற்றமா பண்ணிட்டேன்?
சந்தை
இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. நான் பேசுவதில் உண்மை இருக்கா, இல்லையா?. உண்மை இருந்தால் ஏத்துக்கோ, இல்லை என்றால் விட்டுடு என்றேன். ஏனென்றால் இது சந்தை. சந்தையில் பாகற்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய் விற்கும். பாகற்காய் கசக்கும் ஆனால் உடம்புக்கு நல்லது. அதை விற்காதே என்று சொல்ல உனக்கு உரிமை கிடையாது. நீ வாங்காமல் போ. நான் நிறைய பேசுகிறேன் என்றால் நான் நிறைய படிப்பேன் என்றார் ராதாரவி.