Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கமல் ஹாஸனின் பிக் பாஸுக்கு கூப்பிட்டாலும் போக மாட்டேன்: மாதவன்
சென்னை: கமல் ஹாஸன் நடத்த உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தாலும் ஏற்க மாட்டேன் என மாதவன் தெரிவித்துள்ளார்.
மாதவன், விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் மாதவனுக்கு இருக்கும் கிரேஸ் அப்படியே உள்ளது.
இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறும்போது,
விஜய் சேதுபதி
விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்தது சிறந்த அனுபவம். அவர் அருமையான நடிகர். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வர வேண்டும் என பார்த்து பார்த்து நாங்கள் நடித்தோம்.
விளம்பரம்
நான் விளம்பரம் தேட எதையும் சொல்ல மாட்டேன். நான் ஒரு பொறுப்புள்ள குடிமகன் இனியும் அப்படி தான் இருப்பேன். நான் கடினமாக உழைத்து தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.
பிக் பாஸ்
உலக நாயகன் கமல் ஹாஸன் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளார். அதில் கலந்து கொள்ள அழைப்பு வந்தாலும் ஏற்க மாட்டேன். அது எனக்கு சரிப்பட்டு வராது.
தீபிகா
நான் கதை கேட்கும்போது எனக்கு ஜோடி யார் என்று கேட்க மாட்டேன். அதற்கு பதிலாக கதாபாத்திரங்கள், தயாரிப்பாளர்கள் பற்றி கேட்பேன். தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். கமல், அமிதாப் பச்சன் எப்பொழுது அழைத்தாலும் உடனே வருவேன் என்றார் மாதவன்.