Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா?: முருகதாஸ் விளக்கம்
மும்பை: பாலிவுட்டிலும் கவனம் செலுத்தும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ஜாகையை மும்பைக்கு மாற்றமாட்டாராம்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸாகிறது. இதனால் கத்தி படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு முருகதாஸ் மும்பையில் தங்கி ரிலீஸ் வேலைகளை கவனித்து வருகிறார்.
இப்படி பாலிவுட், கோலிவுட் என்று போகிறாரே மனிதர் பிரபுதேவாவை போன்று மும்பையில் செட்டிலாகிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது. இதை அவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
தமிழ் படங்கள் எனக்கு புகழும், பணமும் கொடுத்தன. எனக்கு மேலும் பல இந்தி படங்கள் எடுக்க ஆசை. இந்தி கற்க விரும்புகிறேன். ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்துவேன். நான் மும்பைக்கு வந்து செல்வேனே தவிர இங்கு செட்டிலாகிவிட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றார்.