twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குரல்களை கேட்க தொடங்கிய சுஷாந்த்.. மிரண்டு ஓடிய காதலி.. உச்சக்கட்ட மனஅழுத்தம்.. பகீர் தகவல்!

    |

    சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்த் தனியாக இருக்கும் போதே யாரோ பேசுவது போன்று தனிமையிலேயே குரல்களை கேட்க தொடங்கியதாக எழுத்தாளர் சுஹ்ரிதா செங்குப்தா தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Sushant Singh Rajput Last Rites Video | இறுதி சடங்கில் பாலிவுட் பிரபலங்கள்

    பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சுஷாந்த்.

    34 வயதான இவரது திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    மரணத்தில மர்மம்

    மரணத்தில மர்மம்

    ஆனால் சுஷாந்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகித்துள்ளனர். இதனை தொடர்ந்து சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் அவரது மேனேஜர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சுஷாந்தின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எழுத்தாளர் சுஹ்ரிதா

    எழுத்தாளர் சுஹ்ரிதா

    இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் சுஹ்ரிதா செங்குப்தா, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்த சில தகவல்களை கூறியிருக்கிறார். சுஹ்ரிதா கடைசியாக மகேஷ் பட்டின் அலுவலகத்தில் சுஷாந்தை சந்தித்தார்.

    சிறந்த பேச்சாளர்

    சிறந்த பேச்சாளர்

    அவர் கூறியதாவது, "சதக் 2 படத்தில் தனக்கு ஏதாவது ரோல் கிடைக்குமா என்பதற்காக சுஷாந்த் பட் சாப்பை சந்திக்க வந்திருந்தார். சுஷாந்த் ஒரு பேச்சாளர். குவாண்டம் இயற்பியல் மற்றும் சினிமா குறித்தும் சுஷாந்த் சிங்கால் பேச முடியும். பட் சாப், சுஷாந்தின் தொடர்ச்சியான உற்சாகத்தின் கீழ் மன அழுத்தத்தை அடையாளம் காட்டினார்.

    மருந்து உட்கொள்ளவில்லை

    மருந்து உட்கொள்ளவில்லை

    அவர் அதை பர்வீன் பாபியில் பார்த்திருந்தார், மருந்துகளைத் தவிர வேறு எதுவும் சரி செய்ய முடியாது என்று அவருக்குத் தெரியும். சுஷாந்தின் விரைவான மன அழுத்தத்திற்கு மத்தியில் சிக்கிக்கொண்ட ரியா, சுஷாந்த் தனது மருந்தை உட்கொள்வதை உறுதிசெய்ய தன்னால் முடிந்தவரை முயன்றார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

    தனிமைப்படுத்திக் கொண்டார்

    தனிமைப்படுத்திக் கொண்டார்

    மருந்து இல்லாமல், சுஷாந்தின் மன அழுத்தம் மோசமடைந்தது. கடந்த ஒரு வருடத்தில், அவர் எல்லா வெளிப்புற தொடர்புகளிலிருந்தும் தன்னை முழுவதுமாக வெட்டிக் கொண்டு தனிமைப் படுத்திக் கொண்டார். ஆனால் அப்போதும் ரியா அவருடன் இருந்தார்.

    குரல்களை கேட்க தொடங்கினார்

    குரல்களை கேட்க தொடங்கினார்

    அப்போதுதான் சுஷாந்த் குரல்களைக் கேட்கத் தொடங்கிய ஒரு காலம் வந்தது. மக்கள் அவரைக் கொல்ல முயற்சிப்பதாக அவர் உணரத் தொடங்கினார். ஒரு நாள் ஒரு அனுராக் காஷ்யப் படம் சுஷாந்தின் வீட்டில் ஓடிக் கொண்டிருந்தது, அப்போது அவர் ரியாவிடம், ‘நான் காஷ்யப்பின் ஆஃபரை வேண்டாம் என்று சொன்னேன். இப்போது அவர் என்னைக் கொல்ல வரப் போகிறார் என்றார்.

    ரியா பயந்தார்

    ரியா பயந்தார்

    அதன் பிறகுதான் சுஷாந்துடன் தங்குவதற்கு ரியா மிகவும் பயந்தார். ரியா, சுஷாந்துடனான காதல் உறவை முறித்துக் கொண்டார். அவருக்கு வேறு வழியில்லை. அவரால் எதுவும் செய்ய முடியாது என்று பட் சாப் அவரிடம் சொன்னார். ரியா அவருடன் தங்கியிருந்தால் அவருடைய மனநலத்தையும் இழக்க நேரிடும்.

    சொல்வதை கேட்கவில்லை

    சொல்வதை கேட்கவில்லை

    சுஷாந்தின் சகோதரி மும்பைக்கு வந்து அவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கும் வரை ரியா காத்திருந்தார். சுஷாந்தின் சகோதரிகள் அவரை ஆதரிக்கவும் ஆறுதலளிக்கவும் முயன்றனர். ஆனால் அவர் யார் சொல்வதையும் கேட்பதற்கு அப்பாற்பட்டவராகிவிட்டார். அவர் தனது மருந்தை உட்கொள்ளவில்லை.

    இருள் சூழ்ந்த நிலவறை

    இருள் சூழ்ந்த நிலவறை

    அவரது இறுதி மாதங்களில், சுஷாந்த் தனது சொந்த மன சிறையில் அடைப்பட்டு, கடுமையாக பாதிக்கப்பட்டார். அவர் மிகவும் ஆழமாக மூழ்கியதால் யாரையும் அவர் தனது இருள் சூழ்ந்த நிலவறைக்குள் செல்ல அனுமதிக்க முடியவில்லை. இதுதான் அவரது மரணத்திற்கு காரணம் என பெரும் சோகத்துடன் கூறியிருக்கிறார் எழுத்தாளர் சுஹ்ரிதா செங்குப்தா.

    English summary
    Writer Suhrita reveals about Actor Sushant Mental condition. He says Sushant starts to hear voices, without medication his mental condition worse.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X