Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கதையை திருடினாரா லிங்குசாமி.. சீமான் அளித்த பரபரப்பு புகார்.. தள்ளுபடி செய்த எழுத்தாளர்கள் சங்கம்!
சென்னை: சீமான் - லிங்குசாமி இடையிலான கதை பிரச்சனைக்கு கதை ஆசிரியர்கள் சங்கம் முடிவுகட்டியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிங்குசாமி. ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
மை நேம் ஈஸ் ஸ்ருதி... த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஹன்சிகா... கதை கேட்டு மிரண்ட ஹன்ஸ்
தொடர்ந்து ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்பட எழுத்தாளர் சங்கம்
தற்போது இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். நடிகர் ராம் அதில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்நிலையில் அந்தக் கதை தான் பதிவு செய்து வைத்துள்ள பகலவன் படத்தின் கதை என சீமான் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ஒரு புகார் அளித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தப் புகாரை அடுத்து லிங்குசாமியை விசாரித்த பாக்யராஜ் தலைமையிலான குழுவினர் 2013-ஆம் ஆண்டில் ஏற்கனவே சீமான் - லிங்குசாமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதால் தற்போதைய புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சீமானின் புகாரை தள்ளுபடி செய்துள்ளனர்.
மாதவன் சொன்ன விஷயம்
இருவரும் ஒரே மாதிரியான கதையை எழுதியது எப்படி என்பது குறித்த கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது. அதாவது நடிகர் மாதவன், தனக்கு தெரிந்த உண்மை சம்பவம் ஒன்றை இருவரிடமும் கூறியுள்ளார்.
கற்பனையுடன் கதை
அந்த முடிச்சை இருவரும் தங்களின் கற்பனையுடன் சேர்த்து கதையாக்கியுள்ளனர். அதனாலேயே இருவரும் அந்த கதை தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி வந்துள்ளனர்.
அப்போதே பிரச்சனை
கடந்த 2014ஆம் ஆண்டே சூர்யாவை வைத்து இந்த கதையை படமாக்க முயற்சி செய்துள்ளார் லிங்குசாமி. ஆனால் அப்போதும் அது தன்னுடைய கதை என்று சீமான் பிரச்சனை எழுப்பியுள்ளார்.
7 ஆண்டுகள் ஆகியும்
இதனை தொடர்ந்துதான் மாற்றாக ஒரு மும்பை தாதா கதையை மையப்படுத்தி அஞ்சான் படத்தை இயக்கினார் லிங்குசாமி. அந்த கதையை வைத்து தான் படம் இயக்கப்போவதாக கூறிய சீமான், 7 ஆண்டுகள் ஆகியும் இயக்கவில்லை.
லிங்குசாமி மீது புகார்
ஆகையால் ஒப்பந்தத்தின் படி தற்போது அந்த கதையை வைத்து தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை இயக்கும் பணியில் இறங்கினார் லிங்குசாமி. இதனை தொடர்ந்துதான் லிங்குசாமி மீது புகார் கொடுத்துள்ளார் சீமான்.