Don't Miss!
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Sports டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுக்கு சூப்பர் யோசனை
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஏன் கமலா, உதயம் தியேட்டர்களில் காலா வெளியாகவில்லை.. வுண்டர்பார் நிறுவனம் விளக்கம்
Recommended Video
சென்னை: சென்னை கமலா மற்றும் உதயம் தியேட்டர்களில் காலா திரைப்படம் வெளியாகாதது ஏன் என்று காலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் விளக்கம்அளித்துள்ளது. மற்ற திரையரங்குகளை ஒப்புக்கொண்ட விதிகளை இந்த திரையரங்குகள் ஒப்புக்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் காலா திரைப்படம் நாளை உகம் முழுவதும் ரிலீசாகிறது. ஆனால் சென்னை கமலா மற்றும் உதயம் தியேட்டர்களில் காலா திரைப்படத்திற்குப் பதில், நாளை ஜூராசிக் வேர்ல்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை உள்ளது. வெளியாவது சந்தேகத்தில் உள்ளது. தற்போது கமலா, உதயம் பின்வாங்கி இருப்பதால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்திலும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது.
சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நாளை காலா படத்திற்குப் பதில் ஜூராசிக் வேல்டு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அத்தியேட்டரின் மேலாளர் கோபி அளித்துள்ள விளக்கத்தில், "காலா படக்குழுவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. டிக்கெட்களை அதிக விலைக்கு விற்க விநியோகஸ்தர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க இயலாது என நாங்கள் மறுத்து விட்டோம். '' என்று விளக்கம் அளித்தார்.
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலா தியேட்டரின் இந்த குற்றச்சாட்டை வுண்டர்பார் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து வுண்டர்பார் நிறுவனம் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது.
அதில் ''மற்ற தியேட்டர்கள் ஏற்றுக்கொண்ட விதிகளை சென்னை கமலா தியேட்டரும், உதயம் தியேட்டரும் ஏற்கவில்லை. அதனால் படம் வெளியாகவில்லை. அதிக விலையில் டிக்கெட் வசூலிக்க சொன்னதால் படம் வெளியாகவில்லை என்று வெளியாகும் செய்தி முழுக்க முழுக்க பொய் ஆதாரமற்றது.'' என்று விளக்கம் அளித்துள்ளது.