Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காதல், திருமணம், விவாகரத்து, சர்ச்சை, ஆடை... இப்போ மட்டும் ஏன் இந்த ‘முகமூடி’ அமலாபால்?
தனது புதிய காதலர் பற்றி அமலாபால் ரகசியம் காப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: எப்போதுமே தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் சுபாவம் கொண்டவர் அமலாபால். ஆனால், தனது புதிய காதலர் விசயத்தில் மட்டும் அவர் ரகசியம் காப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
சிந்து சமவெளி என்ற சர்ச்சை படம் மூலம் தமிழில் அறிமுகமானார் அமலாபால். முதல் படமே மருமகளுக்கும், மாமனாருக்குமான தவறான உறவைப் பற்றி பேசியதால், அமலாபால் மீது தவறான அபிப்ராயமே ரசிகர்கள் மத்தியில் உண்டானது. ஆனால், அந்த இமேஜை உடைத்துப் போட்டது மைனா.
அதனைத் தொடர்ந்து கதைகளைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார் அமலாபால். அதனாலேயே வெகு குறைந்த காலத்திலேயே விஜய், தனுஷ் என முன்னணி நாயகர்களுக்கு நாயகியானார்.
Bigil அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிங்க அட்லி: விஜய் ரசிகர்கள் கோரிக்கை
திருமணம்:
தெய்வத்திருமகள் மற்றும் தலைவா படங்களில் நடித்த போது, இயக்குநர் விஜய்க்கும் அமலாபாலுக்கும் இடையே காதல் உண்டானது. தமிழின் முன்னணி நாயகியாக இருந்தபோதே, திருமணம் செய்து கொண்டு, நடிப்பதில் இருந்து விலகினார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். விவாகரத்தும் செய்து கொண்டனர்.
மீண்டும் நடிப்பு:
அதனைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்கத் தொடங்கினார். இம்முறை கடும் சவால்களுக்கு இடையே தான் அவருக்கு பட வாய்ப்புகள் அமைந்தது. ஆனாலும் சிறந்த கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். இதனால் மீண்டும் திறமையான நடிகை எனப் பேர் எடுத்தார்.
விஷ்ணுவுடன் காதல்:
பாராட்டுகளுக்கு இடையே அவர் சர்ச்சைகளிலும் சிக்கத் தவறவில்லை. ராட்சசன் பட வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையே காதல் என்ற தகவல் தீயாய் பரவியது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தகவலை விஷ்ணு விஷால் மறுத்ததைத் தொடர்ந்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சமூகவலைதளம்
அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் கவர்ச்சியாக உடை அணிந்த புகைப்படங்களை அவர் பதிவேற்றம் செய்து வருகிறார். இது தொடர்பான விமர்சனங்களையும் அவர் கண்டு கொள்வதில்லை. எப்போதும் தன் மனதுக்கு பிடித்தமானவற்றை, யாருக்கும் பயப்படாமல் செய்வதையே அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
ஆடையில்லா நடிப்பு:
ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்தது கூட அப்படித்தான். மற்ற நடிகைகள் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் போல்டாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அப்படம் பற்றிய பேட்டிகளிலும் அமலாபால் கூறியிருக்கும் தகவல்கள் மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
காதலர் யார்?
இந்தச் சூழ்நிலையில் தான் தனது அடுத்த காதல் பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார் அமலாபால். ஆனால் எப்போதும் வெளிப்படையாக பேசும் அவர், இந்த விவகாரத்தில் மட்டும் சற்று பின்வாங்கி இருக்கிறார். தன் காதலரைப் பற்றி வெளிப்படையாக எந்தத் தகவல்களையும் அவர் கூறவில்லை. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. புதிய காதலர் வருகையால் தான் அமலாபால் இப்படி மாறி விட்டாரா என்பது தான் அவர்களது ஆதங்கமே. பார்ப்போம், கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வராமலா போய் விடும் அமலாபால்?