போட்டோ எடுக்குறதுதான் சிஎம் வேலையா? முதலமைச்சர் விஜய்யின் 40 நாள் ஆட்சி இதுதானா? மதிவதனி ஆதங்கம்!

சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அவரது நிர்வாகத் திறன் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதிவதனி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப் பேசிய மதிவதனி, அவர் முதலமைச்சரான பிறகு பல சினிமா பிரபலங்களுடன் தொடர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அவர் சினிமாப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் பிரபலங்களைச் சந்திப்பதையும், புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் யாரும் தவறு சொல்லவில்லை. ஆனால், இங்கே மக்கள் அன்றாடம் பலவிதமான நடுத்தரப் பிரச்சினைகளில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை ஏன் அவர் கவனிக்கத் தவறுகிறார்? மக்களின் துயரங்களைக் கவனிப்பதுதானே ஒரு முதலமைச்சரின் முதல் வேலை.

CM Vijay Madhivadhani

ஒரே நாளில் 12 கொலைகள்: ஒரு நாடு சிறப்பாக இருக்க வேண்டுமெனில் சட்டம் ஒழுங்குதான் மிக முக்கியம் என்று குறிப்பிட்ட மதிவதனி, ஒரு நாடு நல்லபடியாக இருக்க வேண்டும், மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதற்கு முதலில் பாதுகாப்புதான் மிக அவசியம். சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இதற்கு முன்பு இருந்த அரசாங்கத்தையும் நாங்கள் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இந்த 40 நாள் ஆட்சியில் என்ன பெரிய மாற்றம் வந்துவிட்டது? குற்றங்கள் இன்னும் அதிகமாகித்தான் போய்க்கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு மாதமாகத் தமிழ்நாட்டில் பிரச்சினைகள் இரட்டிப்பாகி உள்ளன. ஒரே நாளில் 12 கொலைகள் நடப்பதாகக் கேட்கும் போது மனதிற்குள் பயம் வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்கத் தோன்றுகிறது.

பெண்களுக்குப் பதில் என்ன?: பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று ஆதங்கப்பட்ட அவர், குற்றங்கள் பெருகிவரும் இந்தச் சூழலில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? நான் ஒரு பெண்ணாக, தமிழ்நாட்டின் பிரஜையாக முதலமைச்சரை நோக்கிக் கேள்வி கேட்கிறேன். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை முதலமைச்சருக்கு இருக்கிறது. தேர்தல் சமயத்தில் விஜய்யை நம்பி ஓட்டுப்போட்டவர்களில் பெண்கள்தான் அதிகம். இப்போது அவர்களுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, முந்தைய கொடூரமான ஆட்சியில் இருந்து உங்களை விடுவிக்கிறேன், சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கிறேன். உங்களுக்காகத்தான் நான் இருக்கிறேன் எனப் பெரிய வாக்குறுதிகளுடன் ஆரம்பித்த முதலமைச்சர் விஜய், தற்போது சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதிவதனியின் இந்த அதிரடிப் பேட்டியின் சுருக்கமாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இவரது இந்த நேர்காணல், அரசியல் களத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Read more about: மதிவதனி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X