அழகான பொண்ணு நான்.. அதுக்கேத்த கண்ணு தான்.. வைரலாகும் யாஷிகா போட்டோஸ்!
சென்னை: ராயல் காக்ரா சோலி உடையணிந்து, நெத்தியில் நெத்திச்சூடி எல்லாம் வைத்து, அழகான பொண்ணாக அணிவகுத்து இருக்கும் யாஷிகா ஆனந்த்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
20 வயதாகும் இந்த அழகிய ஏஞ்சல் ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.
தற்போது பிரைடல் கெட்டப்பில் இளவரசி போல இருக்கும் இவரது போட்டோக்கள் பார்ப்பவர்களை ரசிக்கத் தூண்டுகிறது.

விஜய் டிவி டு சன் டிவி
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கிய நடிகை யாஷிகா ஆனந்த், அடுத்ததாக சன் டிவியின் ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து கலக்க ஒப்பந்தமாகி உள்ளார். சமீபத்தில், அது பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரோஜா சீரியல் ரசிகர்களின் பார்வை யாஷிகா ஆனந்த் பக்கம் திரும்பி இருக்கிறது.

ராணியை போல
த்ரோபேக் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வந்த நடிகை யாஷிகா ஆனந்த், சமீபத்தில் எடுத்துள்ள ராயல் போட்டோஷூட் போட்டோக்களை தற்போது பகிர்ந்து இணையத்தை திணறடித்து வருகிறார். மேலும், அந்த போட்டோக்களை போட்டு, கிரீடம் எமோஜியை போட்டு, தான் ஒரு ராணி என சுட்டிக்காட்டி உள்ளார்.

அழகான பொண்ணு
யாஷிகா ஆனந்த்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த உடனே, அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் நடிகை பானுமதி பாடி ஆடும், "அழகான பொண்ணு நான்.. அதுக்கேத்த கண்ணுதான்" என்கிற பாடல் தான் ரசிகர்களுக்கு உடனடியாக ஸ்ட்ரைக் ஆகிறது. அந்த அளவுக்கு வசீகர கண்களுடன் இளைஞர்களை ஈர்க்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

‘பன்’ன காணோம்
நல்லா புசுபுசுன்னு ‘பன்'னு மாதிரி இருந்த யாஷிகா ஆனந்த், என்னடா இப்படி மெலிந்து போய்ட்டாரே, என அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் பலவித கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். குண்டா அழகா இருந்தீங்க, ஏன் இப்படி ஒர்க்கவுட் பண்ணி இளைத்துப் போயிட்டீங்க என வருத்தத்துடன் கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











