மகத் கிளம்பியபோது யாஷிகா போட்ட அந்த எக்ஸ்டிரா பிட்டை பார்த்தீர்களா?
Recommended Video

சென்னை: மகத் கிளம்பியபோது அவரை தூண்டிவிட்டுள்ளார் யாஷிகா.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து நேற்று மகத் வெளியேற்றப்பட்டதை பார்த்து பார்வையாளர்களுக்கு ஆனந்தமோ ஆனந்தம். காரணம் அவர் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோருடன் சேர்ந்து ஓவராக ஆட்டம் போட்டுவிட்டார்.
பொசுக்கு பொசுக்குன்னு கோபப்பட்டு வார்தையை விட்டுவிட்டார் மகத்.

போலி
மும்தாஜை அந்த பொம்பள கெட்டவ என்று தாறுமாறாக பேசி பார்வையாளர்கள் மத்தியில் கெட்டப் பெயர் வாங்கினார் மகத். ஆனால் பிக் பாஸ் மேடையில் கமல் அருகே நின்று பேசியபோது மும்தாஜை புரிந்துகொள்ளாமல் போய்விட்டேனோ என்றார் மகத். ஐஸ்வர்யா, யாஷிகாவை விட்டு விலகியதுமே மகத்துக்கு உண்மை எல்லாம் தெரியத் துவங்கிவிட்டது.

அறிவுரை
கோபப்படாமல் இரு என்று ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை வழங்கினார் மகத். யாஷிகா கமல் அருகில் நின்ற மகத்தை பார்த்ததும் கண்ணீர் விட்டார். உடனே மகத்தோ, அழாதே என்று ஆறுதல் கூறினார். வெளியே வா பார்க்கலாம் என்றார். இதை பார்த்த பார்வையாளர்களோ இந்த மகத் திருந்தவே மாட்டார் என்று நொந்து கொண்டனர்.

யாஷிகா
கோபப்படாதே என்று யாஷிகா மகத்துக்கு அறிவுரை வழங்கினார். நீ நல்லவன். மிஸ் பண்ணுகிறேன். வெளியே வந்து பார்க்கிறேன். நானும் அவரை மிஸ் பண்ணுவதாக பிராச்சியிடம் கூறு. ஐ லவ் யூ என்றார் யாஷிகா. ஏற்கனவே ஒரு முறை காதலை சொல்லி மகத், பிராச்சி இடையேயான காதலை அத்துவிட்டது போதவில்லை என்று மறுபடியும் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.

கமல்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து மேடையில் நின்றபோதே மகத்திடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அந்த 2 பெண்களுடன் சேர்ந்து நாசமாகப் போய்விட்டதை உணர்ந்தது போன்று இருந்தார். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களும் ஐஸ்வர்யா, யாஷிகா செய்தது தவறு என்றே நினைக்கிறார்கள். மகத் கமல் கூறிய அறிவுரையை ஏற்று இனியாவது நல்லபடியாக இருப்பார் என்று நம்புவோமாக.


Click it and Unblock the Notifications











