Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆபத்தான நிலையில் யாஷிகா...3 பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீஸ்...ட்விட்டரில் உருகும் எஸ்.ஜே.சூர்யா
சென்னை : நேற்று இரவு மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த்தின் கார் விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா மற்றும் அவரது 2 நண்பர்கள் ஐசியு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மீட்பு… காவல்துறைக்கு நன்றி !
காரில் யாஷிகாவுடன் வந்த அவரது நெருங்கிய தோழியான வாலிஷெட்டி பவானி, விபத்தில் உயிரிழந்தார். அதிகாலையில் வெளியான இந்த தகவல் கோலிவுட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தீவிர சிகிச்சையில் யாஷிகா
யாஷிகாவின் தந்தை தற்போது டெல்லியில் உள்ளார். அவரை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்ட போது, என் மகள் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளதாக மருத்துவமனையில் இருந்து ஃபோன் செய்தார்கள். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
யாஷிகா மீது வழக்கு
அதே சமயம் யாஷிகா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓவர் ஸ்பீடில் காரை ஓட்டியது, அலட்சியத்தால் ஒருவர் உயிரிழக்கு காரணமாக இருந்தது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்
மேலும் விபத்தின் போது யாஷிகா தான் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் குடிபோதையில் காரை ஓட்டினாரா, இரவு நேரத்தில் நண்பர்களுடன் எங்கு சென்றார், என்ன நடந்தது என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இப்போ தான் ஹீரோயின் ஆனார்
சினிமாவில் இதுவரை சிறிய ரோல்களில் நடத்து வந்த யாஷிகா தற்போது எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் கடமையை செய் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அத்துடன் பிஸியான மாடலான இவர் அளவில்லாமல் கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி அந்த ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்.
ட்விட்டரில் உருகிய எஸ்.ஜே.சூர்யா
யாஷிகா விபத்தில் காயமடைந்த தகவல் அறிந்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா அழகான பெண் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நல்ல நடிகரும் கூட என்பது எங்களுக்கு தான் தெரியும். கடமையை செய் படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு சரியான ஆரம்பமாக இருக்கும். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.