பிள்ளையார் சிலைக்கு முன்னாடி இப்டியா செக்ஸியா நிக்குறது.. யாஷிகாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்!
நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.
Recommended Video
சென்னை: பிள்ளையார் சிலையருகே நடிகை யாஷிகா எடுத்துக் கொண்ட கவர்ச்சிப் புகைப்படம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் மிகவும் பிரபலமாகிவிட்டார் யாஷிகா. இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் அவரை லட்சக்கணக்கானவர்கள் பின்தொடர்கிறார்.
யாஷிகா பதிவிடும் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் லைக்ஸ்கள் குவிகின்றன. அதேசமயம், சில போட்டோக்களை வைத்து, யாஷிகாவை வறுத்தெடுக்கவும் நெட்டிசன்கள் தவறுவதில்லை. காரணம் அந்தளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படங்களாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தமிழ் மியா கலீபா:
இதனாலேயே அவரை தமிழ் சினிமாவின் மியா கலீபா என நெட்டிசன்கள் அழைப்பதுண்டு. அதற்கு யாஷிகா கோபமாக பதில் கூறுவது வேறு கதை. ஆனால், தொடர்ந்து தனது கவர்ச்சிப் படங்களைப் பதிவிடுவதை அவர் நிறுத்துவதும் இல்லை.

கவர்ச்சிப் புகைப்படம்:
இந்நிலையில், புதிதாக ஒரு கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் யாஷிகா. அதில், சிகப்பு நிற ஆடையில், தொடை தெரியும்படி கிளாமராக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் அவர். இதைப் பார்த்த பலர் யாஷிகாவை கடுமையாக திட்டி வருகின்றனர்.

கோபம்:
அதற்குக் காரணம் அந்த போட்டோவுக்கு பின்னால் உள்ள பிள்ளையார் சிலை தான். 'சாமி சிலைக்கு முன்பு இப்படியா கிளாமராக போஸ் கொடுப்பது' என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்கின்றனர். ஆனாலும் இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைரல்:
ஆனாலும், வழக்கம் போல் சில ரசிகமணிகள், யாஷிகாவின் இந்தப் புகைப்படத்தை பார்த்து, ‘வாவ், சூப்பர்' என ஜொள்ளுவிட்டபடி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்தப் புகைப்படத்தை இதுவரை சுமார் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











