Don't Miss!
- News பேசிக்கொண்டு இருக்கும் போதே.. பாதியில் நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி.. சட்டென ஓபிஎஸ் தந்த ரியாக்சன்
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்
நடிகை யாஷிகா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கைது செய்யப்பட்ட அவரது காதலர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை: ஆடம்பர வாழ்க்கைக்கு யாஷிகா ஆசைப்பட்டதால் திட்டியதாகவும், ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொண்ட துணை நடிகையின் காதலர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விமலின் மன்னர் வகையறா படத்தில் துணை நடிகையாக நடித்தவர் யாஷிகா. சீரியல்களில் நடித்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு காரணம் காதலர் மோகன்பாபு தான் என தனது கடைசி வாட்ஸ் அப் பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், யாஷிகாவின் காதலர் மோகன்பாபுவைக் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் மோகன்பாபு.
விமல் பட நடிகை யாஷிகா தற்கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த காதலன் கைது!
நட்பு காதலானது:
வடபழனியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்தேன். அப்போது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்த யாஷிகாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகினோம். பின்னர் காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.
முடிவு:
இரு வீட்டிலும் சம்மதம் வாங்கிய பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்தோம். அதுவரை தனி வீடு எடுத்து தங்கலாமென முடிவு செய்தோம். அதன்படி, பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனியில் தனி வீடு எடுத்து தங்கியிருந்தோம்.
ஆடம்பர வாழ்க்கை:
சினிமாவில் நடிக்கும் ஆசையில் யாஷிகா அடிக்கடி வெளியில் சென்றுவிட்டு வருவார். மேலும் ஆடம்பரமாக இருப்பாள். போதிய வருமானம் இல்லாததால் செலவை குறைத்துக் கொள்ளும்படி அடிக்கடி கூறுவேன். அவள் எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்தாள்.
கோபம்:
இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் கோபத்தில் என்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டேன். யாஷிகா தற்கொலை செய்துகொள்வாள் என கொஞ்சம்கூட நினைத்து பார்க்கவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மோகன்பாபுவிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்துள்ளனர்.