Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'டிஆர்பிக்காக என்ன வேணாலும் செய்வீங்களா'... ஊடகங்களை கெட்டவார்த்தையில் திட்டிய பிக் பாஸ் பிரபலம்..!
சென்னை நுங்கம்பாக்கம் கார் விபத்தில் தனக்கு தொடர்பில்லை என நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தன்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக நடிகை யாஷிகா ஆனந்த் அறிவித்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் அடிக்கடி பப்களில் ஆட்டம் போட்டப்படி வீடியோ வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட லைவ் வீடியோவில் யாஷிகாவை அவரது ஆண் நண்பர் லிப் கிஸ் அடித்த வீடியோ வைரலானது.
கார் விபத்து
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்க்டன் சாலையில் நடந்த சொகுசு கார் விபத்தில் யாஷிகாவின் பேரும் அடிபட்டது. விபத்தை ஏற்படுத்தி விட்டு அவர் தப்பிச் சென்று விட்டதாக செய்திகள் உலா வந்தன.
யாஷிகா விளக்கம்
ஆனால் இது உண்மையில்லை என தற்போது யாஷிகா விளக்கமளித்துள்ளார். டிஆர்பிக்காக தனது பெயரை தவறாக பயன்படுத்திய நிருபர்கள் மற்றும் மீடியாக்கள் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக யாஷிகா தெரிவித்துள்ளார்.
வேடிக்கை பார்த்தேன்
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், " அந்த விபத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விபத்து நடந்ததை பார்த்து பதறி போய், யாருக்காவது அடிப்பட்டு இருக்கிறதா என பார்ப்பதற்காக, ஒரு மனிதாபிமான அடிப்படையில் தான் நான் காரில் இருந்து இறங்கிச் சென்றேன்.
போலீசுக்கு தெரியும்
நான் அப்போது எனக்கு ஏற்படப் போகும் ஆபத்தை பற்றி எல்லாம் யோசிக்கவில்லை. விபத்தை வேடிக்கை பார்த்தவர்கள் நான் தான் விபத்தை ஏற்படுத்தினேன் என கூறியது என் காதில் கேட்டது. அந்த இடத்தில் போலீசாரும் இருந்தனர். ஒருவேளை நான் விபத்து ஏற்படுத்தியிருந்தால் அவர்கள் என்னை சும்மாவிட்டிருப்பார்களா.
சொகுசு கார்
எனது பெயரில் ஒரு ஹோண்டா சிட்டி கார் மட்டும் தான் உள்ளது. மற்றப்படி வேறு சொகுசு கார் ஏதும் என் பெயரில் இல்லை. இது தான் உண்மை.
டிஆர்பிக்காக
மீடியாக்கள் அவர்களுடைய சொந்த லாபத்துக்காக என் பெயரை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
டிஆர்பிக்காக இப்படி செய்திருக்கிறார்கள். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தால் உண்மை என்ன என்பது தெரிந்துவிடும்.
மானநஷ்ட வழக்கு
டிஆர்பிக்காக என் பெயரை கலங்கப்படுத்திய அந்த... (கெட்டவார்த்தை) நிருபர்கள் மற்றும் மீடியாக்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகிறேன். மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.