Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தேனிலவு போட்டோ வைரலான பிறகு ரகசிய திருமணத்தை ஒப்புக் கொண்ட நடிகை
மும்பை: தேனிலவு புகைப்படங்கள் வைரலான பிறகு வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ராக்கி சாவந்த்.
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. என்ன ராக்கி, திருமணமாகிவிட்டதா என்று கேட்டதற்கு அதெல்லாம் இல்லை. போட்டோஷூட்டுக்காக மணக்கோலத்தில் போஸ் கொடுத்தேன், நான் இன்னும் சிங்கிளாகவே உள்ளேன் என்றார்.
இதையடுத்து அவரின் தேனிலவு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
அம்மா தானம் செய்து சிறுநீரக மாற்று ஆபரேஷன் நடந்ததா?: ராணா விளக்கம்
ராக்கி சாவந்த்
தேனிலவு புகைப்படங்கள் வெளியான பிறகும் நான் சிங்கிள் தான் என்று சொல்லப் போகிறீர்களா ராக்கி என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் பயந்துவிட்டேன், அதனால் உண்மையை கூறவில்லை. ஆம், எனக்கு திருமணமாகிவிட்டது. இந்த செய்தியை நான் உறுதி செய்கிறேன் என்றார்.
தொழில் அதிபர்
என் கணவரின் பெயர் ரித்தேஷ். அவர் இங்கிலாந்தில் தொழில் அதிபராக உள்ளார். திருமணம் முடிந்த பிறகு அவர் இங்கிலாந்திற்கு சென்றுவிட்டார். என் விசா வேலைகள் முடிந்த உடன் நானும் கிளம்பிவிடுவேன். திருமணத்திற்கு பிறகும் நான் படங்களில் நடிப்பேன். டிவி நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும் என்பது என் ஆசை. அது தற்போது நிறைவேறும் என்று நினைக்கிறேன்.
கடவுள்
அருமையான கணவரை கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரபு சாவ்லாவுடனான என் முதல் பேட்டியை பார்த்ததில் இருந்து ரித்தேஷ் என் ரசிகராகிவிட்டார். வாட்ஸ்ஆப் செய்தார். அதன் பிறகு செல்போனில் பேசி நாங்கள் நண்பர்கள் ஆனோம். இது எல்லாம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ரித்தேஷுடன் பழக்கம் ஏற்பட்டதும் நான் அவரின் மனைவியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். என் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது என்று ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
பணம்
முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு ராக்கிக்கு டொரண்டோவை சேர்ந்த தொழில் அதிபர் இலேஷ் பருஜன்வாலாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. காசுக்காகத் தான் நிச்சயதார்த்தத்திற்கு ஒப்புக் கொண்டதாகக் கூறி திருமணத்தை நிறுத்தினார் ராக்கி. ஜே.டபுள்யூ. மேரியட் ஹோட்டலில் நடந்த போட்டோஷூட்டில் கலந்து கொண்டதற்கு போய் எனக்கு திருமணமாகிவிட்டது என்று பேசுகிறார்கள். எனக்கு திருமணமாகவில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறிய கையோடு ரகசிய திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார் ராக்கி என்பது குறிப்பிட்டத்தக்கது.