Don't Miss!
- News
செயற்கை கை, கால் பெற இனி கட்டணமில்லை.. மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்
- Finance
எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கடனை கட்டாததால் வீட்டுக்கு சீல்..வீட்டிலிருந்த பொருள் மாயம்..புகார் கொடுத்த ஒய்.ஜி.மகேந்திரன் மகள்!
சென்னை : வீட்டில் இருந்த 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை காணவில்லை என மதுவந்தி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மூத்த நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி. மதுவந்தி தர்மதுரை, கடம்பன், ஷிவலிங்கா, தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலிலும் நடித்திருக்கிறார் மதுவந்தி. அதுமட்டுமின்றி தனது தந்தையின் மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறார்.
8000 கோடி மக்களுக்கு 5000 கோடி பணமா.. அடித்து விட்ட மதுவந்தி.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

மதுவந்தி
மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டையில் அப்பார்ட்மெண்டை 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். வீட்டை வாங்கிய மதுவந்தி மாத தவணையை சரியாக கட்டாததால், இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் பலமுறை பணத்தை கட்டும்படி கேட்டுள்ளது.

வீட்டிற்கு சீல்
ஆனால், மதுவந்தி பணத்தை கட்டவில்லை. மேலும், நிதி நிறுவனம் அனுப்பிய நோட்டிசுக்கும் எந்தவிதமான பதிலையும் அளிக்காததால், இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மதுவந்தி மீது வழக்கு போட்டிருந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தி செலுத்த வேண்டிய தொகைக்கு அவரின் வீட்டிற்கு சீல் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு மதிவந்தியின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டது.

ஏலம் போன வீடு
அதன் பின் பைனான்ஸ் நிறுவனம் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுமாறு மதுவந்திக்கு பல முறை சொல்லியும் அவர் பொருட்களை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், பைனான்ஸ் நிறுவனம் வீட்டை மற்றொரு நபருக்கு ஏலம் விட்டு விட்டது.

ரூ.35 லட்சம் பொருட்களை காணவில்லை
இந்நிலையில், மதுவந்தி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், அதில் வீட்டை ஏலம் விட்டது தனக்கு தெரியாது என்றும், வீட்டில் இருந்த சுமார் 35 லட்சம் ரூபாய் பொருட்களை காணவில்லை என்றும். காணாமல் போன பொருட்களை மீட்டு தர வேண்டும். வீட்டை ஏலம் விட்ட பைனான்ஸ் நிறுவன மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மதுவந்தி அளித்துள்ள புகார் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.