Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இன்றும் டீ குடிக்க அங்கு தான் போகிறேன்.. பழசை மறக்காத யோகிபாபு !
சென்னை : இன்றும் பிரசாத் ஸ்டூடியோ பின்புறம் உள்ள டீ கடையில் தான் டீ குடிக்கிறேன் நான் எதையும் எளிதில் மறக்கக்கூடியவன் இல்லை என்று யோகி பாபு கூறினார்.
யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக உருவெடுத்து இருக்கிறார். யோகிபாபு வருடம் முழுவதும் பிஸியாக இருக்கும் அளவுக்கு நிறைய படங்கள் அவரின் கைவசம் உள்ளன. முன்னணி நாயகர்களின் ஆஸ்தானா காமெடியனாகவும் மாறியிருக்கிறார் .
யோகிபாபு கடந்த வருடம் கோமாளி படத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றிருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய காரணத்திற்காக யோகிபாபுவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மற்றொரு சிறந்த காமெடியனான ரோபோ சங்கர் வழங்கினார் .
மேடையில் பேசிய யோகிபாபு, கோமாளி படப்பிடிப்பின் போது நான் நிறைய கிண்டல்களை செய்வேன் அது படப்பிடிப்புக்கு மிக தொந்தரவாக இருந்தது. ஜெயம் ரவி என்னை அழைத்து படத்தில் சொல்லுறத செய்யுங்க உங்களுக்கு விருது கட்டாயம் கிடைக்கும் என்றார். அதே போல விருது வென்று இருக்கிறேன் என்று கூறி ஜெயம் ரவிக்கு நன்றி தெரிவித்தார் .
மேலும் யோகிபாபுக்கு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் மூன்று விருதுகள் கிடைத்தது. அதனை பற்றி மேடையில் பேசிய யோகிபாபு சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறினார். ஏனெனில் சிவகார்த்திகேயனால் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார் .
மேலும் 2019ல் யோகிபாபுக்கு மறக்கமுடியாத படம் என்றால் அது பிகில் படத்தையும் கூறலாம். அந்த படத்தில் வரும் காமெடி காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து இருக்கும். அந்த படத்தில் யோகிபாபு கால்பந்து வீரராக நடித்து இருப்பார். யோகிபாபுவை உற்சாகப்படுத்தும் நோக்கில் நடன இயக்குனர் பிக்பாஸ் புகழ் சாண்டி மேடையில் யோகிபாபுவுடன் கால்பந்து விளையாடினார்.
வாய்ப்புத் தேடி அலைந்த போது எப்படி பிரசாத் ஸ்டூடியோ பின்புறம் உள்ள டீ கடையில் டீ குடித்தேனோ. அதே போலத்தான் இப்போதும் நேரம் கிடைக்கும் போது, அங்கு சென்று டீ குடிக்கிறேன். நான் எதையும் எளிதில் மறக்கக்கூடியவன் இல்லை என்று யோகி பாபு கூறினார். முன்னணி நட்சத்திரமாக வளர்ந்தும் தற்போதும் எளிமையுடன் யோகிபாபு இருக்கிறார் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.