Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதெல்லாம் இல்லைங்க... என் கல்யாணம் பத்தி நானே சொல்றேன்... யோகிபாபு இப்படி சொல்றாரே?
சென்னை: எனது திருமணம் பற்றி நானே அறிவிக்கிறேன் என்று காமெடி நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் பிசி நடிகராக இருப்பவர் யோகிபாபுதான். அவர் கால்ஷீட்டுக்காக முன்னணி ஹீரோக்கள் கூட காத்திருக்க வேண்டிய நிலை.
Recommended Video
அவர் நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
திருமணத் தகவல்
இந்நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாகவே யோகி பாபுவுக்கு திருமணம் என அடிக்கடி தகவல் பரவியது. சமீபத்தில் துணை நடிகை ஒருவருடன் யோகி பாபு இருக்கும் போட்டோ வைரலானது. ஆனால் போட்டோவில் இருக்கும் பெண்ணுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று யோகி பாபு விளக்கம் அளித்திருந்தார்.
செல்பி புகைப்படம்
சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஒரு துணை நடிகை. அவர், ஒரு படத்தின் ஷூட்டிங்கில் யோகி பாபுவுடன் அந்த செல்பியை எடுத்ததாகத் தெரிவித்ததால் பிரச்னை முடிந்தது. இந்நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகியிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதனை நடிகர் யோகி பாபுவும் உறுதி செய்ததாகவும், இது பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் என்றும் அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாயின.
திருத்தணி கோயிலில்
இதையடுத்து நடிகர் யோகி பாபு திருமணம் வரும் 5 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளதாகவும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என்றும் அதற்காக ஏற்பாடுகளை இரண்டு குடும்பத்தினரும் செய்து வருவதாகக் கூறப்பட்டது.
தவறானது
இந்நிலையில் இதை யோகிபாபு மறுத்துள்ளார். என் திருமணம் பற்றி வந்த தகவல் தவறானது. என் திருமணம் பற்றி நானே அறிவிப்பேன். எனக்கு மணப்பெண் தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் முடிவாகவில்லை. கண்டிப்பாக இந்த வருடம் எனக்கு திருமணம் நடக்கும். முடிவானதும் நானே அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.