Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நீங்க நடிச்சாதான் கல்யாணம் நடக்கும்னு அந்த பொண்ணு சொல்லிச்சு.. ஓகேன்னுட்டேன்.. யோகிபாபு பேச்சு!
'நீங்க நடிச்சாதான் கல்யாணம் நடக்கும்னு அந்த பொண்ணு சொல்லிச்சு' யோகிபாபு பேச்சு!
சென்னை: சம்பள விஷயத்தில் நான் கறார் இல்லை என்று நடிகர் யோகிபாபு சொன்னார்.
பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா.
யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது.
போதைப் பொருள் வழக்கு.. பிரபல நடிகர் அர்ஜுன் ராம்பால் காதலியின் தம்பி கைது.. பரபரக்கும் திரையுலகம்!
ரொம்ப பயமா இருக்கு
இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ பாடல்களை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர் யோகிபாபு பேசும்போது கூறியதாவது: ஷக்தி சிதம்பரம் சார் இந்த மேடையில் என்னை கதாநாயகனாக நிற்க வச்சிட்டார். ரொம்ப பயமா இருக்கு.
வடிவேலு ஜீனியஸ்
இந்தப் படம் முதலில் வடிவேல் சாருக்கு பண்ணியது என்று ஷக்தி சார் சொன்னார். உடனே நான் "வடிவேலு சார், ஜீனியஸ். எனக்கு எப்படி செட்டாகும்"னு கேட்டேன். செட்டாகும்னு நடிக்க வச்சிருக்கார். இந்தப்படம் வெற்றி அடைய உங்கள் ஆதரவும் அன்பும் வேணும். நான் சம்பள விசயத்தில் பெரிய கறார் கிடையாது. என் மேனஜரிடம் வேண்டுமானால் கேளுங்க.
கல்யாணம் நடக்கும்
சமீபத்தில் கூட ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் பொண்ணு.. ஒரு கதைப் பண்ணிருக்கேன், நீங்க நடிச்சுக் கொடுக்கணும். ஆனால் என்கிட்ட பட்ஜெட் இல்ல. இந்தப் படம் நடந்தாதான் எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொல்லிச்சு. நான் உடனே ஃப்ரீயா நடிச்சித் தர்றேம்மா, உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும் என்று சொன்னேன்.
அட்ஜெஸ்மென்ட்
இப்படி நிறைய அட்ஜெஸ்மென்ட் பண்ணிட்டுதான் இருக்கேன். ஷக்தி சிதம்பரம் டயலாக்கில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். படத்தின் ட்ரைலரில் சொன்ன மாதிரி நான் காமெடியன்தான், காமெடியன்தான். இவ்வாறு யோகிபாபு கூறினார்.
எப்படி பேசுவது
இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, யோகிபாபுவை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. அந்தத் தம்பியிடம் எப்படி பேசுவது என்று சிந்திக்கும் போது, அவர் என்கிட்ட நேரே வந்து, சார் நான் உங்க ரசிகன் என்றார். இந்த எளிமை, வாழ்நாள் முழுதும் அவரை நல்லா வைக்கும். இந்த 7 மாதங்களாக நாம் எல்லாருமே பேயாகத்தான் இருந்தோம். இப்பத்தான் மனுசங்களா உலாவுறோம் என்றார்.