Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்... தள்ளிப் போகிறது காமெடி நடிகர் யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி?
சென்னை: காமெடி நடிகர் யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிப்போவதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் பிசி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. அவர் கால்ஷீட்டுக்காக முன்னணி ஹீரோக்கள் கூட காத்திருக்க வேண்டிய நிலை.
ரஜினி, அஜித், விஜய் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு பிசி.
அப்பவே அப்படி.. பிக்பாஸ் வீட்டிலேயே கொரோனா அட்வைஸ் சொன்ன மீரா மிதுன்.. வைரலாகும் வீடியோ!
திருமணம்
இவருக்கும் உறவினரான மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் பிப்ரவரி 5 ஆம் தேதி, திருத்தணி முருகன் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இதில் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக சக நடிகர்களையும், நண்பர்களையும் திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை என்று கூறியிருந்தார் யோகிபாபு.
முதல்வர்
இந்நிலையில், ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரைச் சந்தித்து திருமண வரவேற்புக்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்திருந்தார். சினிமா பிரபலங்களையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வந்தார்.
ஊரடங்கு உத்தரவு
இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, நாடு முழுவதும் இப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. சினிமா படப்பிடிப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பட ரிலீஸ்கள் தள்ளிப் போயுள்ளன. பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் யாரும் எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.
என்ன செய்வது?
இதற்கிடையே, நடிகை உத்ரா உண்ணி, மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி, தெலுங்கு ஹீரோ நிதின் ஆகியோர் தங்கள் திருமண விழாக்களை தள்ளி வைத்துள்ளனர். சிலர் எளிமையாக குடும்பத்துக்குள் நடந்த முடிவு செய்துள்ளனர். இதையடுத்து நடிகர் யோகிபாபுவும் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தள்ளி வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மே மாதம் தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.