யோக்கியன் வாரான் செம்பதூக்கி உள்ள வை- இப்படி ஒரு தலைப்பு!
ஊரில் புழங்கும் புகழ்பெற்ற பழமொழியான யோக்கியன் வரான் சொம்பத் தூக்கி உள்ள வை என்பதையே ஒரு படத்துக்கு தலைப்பாக்கியுள்ளனர். சுவாமி ராஜ் என்ற புதியவர் இயக்குகிறார்.
இந்தப் படத்துக்காக ஒரு பாடலை சமீபத்தில் படமாக்கினர்.

அந்தப் பாடல்..
அன்பு கெட்ட பொண்ணு மேல ஆசை உனக்கு எதுக்குடா
அவசரமா எதையும் செய்யும் பொண்ண தூர ஒதுக்குடா
இதயம் இல்லா பொண்ண நெனச்சி ஏங்குறத நிறுத்துடா
பாதை மாறி போகும் மனச பக்குவமா திருத்துடா...
இந்தப் பாடலை வடபழனியில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் பதிவு செய்தனர்.
ஆதிஷ் உத்ரியன் இசையில், பாடலாசிரியர் தவசிமணி இயற்றி, கானா பாலா பாடியுள்ளார்.
இந்தப் பாடல் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக இசையமைப்பாளரைப் பாராட்டினார் கானா பாலா.
Comments


Click it and Unblock the Notifications