Don't Miss!
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்... பிரபல ஹீரோ மீது நடிகை ஶ்ரீரெட்டி மீண்டும் அட்டாக்
சென்னை: பிரபல ஹீரோவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார், சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி.
சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி. இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது.
அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில தெலுங்கு நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார், ஶ்ரீரெட்டி.
தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்தார்.
பவன் கல்யாண்
இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோவும் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் பற்றி மீண்டும் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுபற்றி தெலுங்கு பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன.
பல பெண்களை
அதில், ஶ்ரீரெட்டி கூறியிருப்பதாவது: என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் (பவன் கல்யாண்) வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. பல இளம்பெண்களை கர்ப்பமாக்கியுள்ளீர்கள்.
சென்னைக்கு ஓடிவில்லை
நான் ஐதராபாத்தில் ஏற்கனவே இருந்த வீட்டில்தான் இருக்கிறேன். அடிக்கடி வந்து செல்கிறேன். உங்கள் குடும்பத்தைக் கண்டும் ரசிகர்களை கண்டும் சென்னைக்கு ஓடிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
ஜெகன்மோகன்
அவர்களுக்கு சொல்கிறேன், பவன், பல பெண்களுடன் விளையாடியவர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றி பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இப்போது அவரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் புகார் கூற இருக்கிறார்கள்.
பஞ்சாயத்து தலைவர்
இன்னும் சிலரும் வெளியே வருவார்கள். உங்களால் ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சராக முடியாது. ஏன், பஞ்சாயத்து தலைவராக கூட ஆக முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார். இந்த புகார் தெலுங்கு சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.