Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'அம்மா'வுக்காக கொஞ்ச நேரம் மட்டும் உண்ணாவிரதம் இருந்த சூர்யா, விக்ரம், விமல், கார்த்தி
சென்னை: ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பை எதிர்த்து திரை உலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வந்த இளம் நடிகர்கள் சிலர் வந்த வேகத்தில் கிளம்பிப் போய் விட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பை எதிர்த்து தமிழ் திரை உலகினர் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட திரை உலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசினர். சிலர் அம்மாவுக்கு கிடைத்த தண்டனையை நினைத்து குமுறினர், சிலர் கதறி அழுதனர்.
இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ரஜினி, கமல் ஹாஸன், அஜீத், விஜய் ஆகியோர் வரவில்லை. சூர்யா உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார், போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பந்தலுக்கு வந்த 15 நிமிடத்தில் அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.
அதேபோல விக்ரம், விமல், கார்த்தி போன்ற நடிகர்களும் வந்த வேகத்தில் கிளம்பிப் போய் விட்டனர்.