Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காதல் தோல்வி.. வாய்தா பட நடிகை தீபா என்கிற பவுலின் தற்கொலை.. அதிர்ச்சியில் குடும்பம்!
சென்னை: வாய்தா படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை தீபா என்கிற பவுலின் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமாகி வந்த பவுலின் திடீரென இப்படியொரு முடிவை எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
காதல் தோல்வி காரணமாகத்தான் அவர் இப்படியொரு சோக முடிவை எடுத்துக் கொண்டார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது..தூரிகை கபிலனின் ஃபேஸ்புக் போஸ்ட்.. இப்படி சொன்னவருக்கா இந்த கதி?
கபிலன் மகள்
சமீபத்தில் பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரையும் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருமணத்துக்கு பெற்றோர்கள் வற்புறுத்தியது தான் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படது. தூரிகை தற்கொலை செய்துகொண்டு இறந்த கொஞ்ச நாட்களிலேயே இன்னொரு இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இளம் நடிகை தற்கொலை
29 வயதே ஆகும் தீபா என்கிற பவுலின் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார். விருகம்பாக்கத்தில் தனியாக ஒரு பிளாட்டில் வசித்து வந்த அவர் திடீரென தனது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பவுலினின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
காதல் தோல்வி
இளம் துணை நடிகை தீபா என்கிற பவுலின் காதல் தோல்வியை சமீபத்தில் சந்தித்ததால் தான் இப்படியொரு விபரீத முடிவை மேற்கொண்டார் என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. பவுலினின் தற்கொலை செய்தி அவரது குடும்பத்தினரையும் அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்
துணை நடிகை பவுலின் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளார். சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என நினைத்திருந்த அவர், தீடிரென இப்படியொரு முடிவு எடுப்பதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகவே உள்ளது என அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வாய்தா படத்தில்
இயக்குநர் மஹிவர்மன் இயக்கத்தில் நாசர் உள்ளிட்டோர் நடித்த வாய்தா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் பவுலின் ஜெஸிகா. அதற்கு முன்னதாக துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது மறைவை அறிந்து சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.