Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்
Recommended Video
சென்னை: பட வாய்ப்பு தருவதாக அழைத்துச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து 3 ஆண்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த 23 வயது நடிகை ஒருவருக்கு குமார் என்பவர் போன் செய்து தான் ஒரு தயாரிப்பாளர் என்றும், பட வாய்ப்பு குறித்து பேச நேரில் வருமாறும் அழைத்துள்ளார்.
போரூரில் உள்ள ஒரு இடத்திற்கு வருமாறு குமார் கூற அந்த நடிகையும் சென்றுள்ளார்.
2 ஆண்கள்
குமார் சொன்ன இடத்திற்கு சென்ற அந்த நடிகையிடம் பைக்கில் வந்த இருவர் பேசியுள்ளனர். குமார் தங்களை அனுப்பி வைத்ததாகவும் அவரை குன்றத்தூருக்கு அழைத்து வரச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர்.
நடிகை
ஒரு வாடகை டாக்சியை பிடித்து அதில் நடிகையுடன் ஒருவர் செல்ல மற்றொருவர் பைக்கில் பின் தொடர்ந்துள்ளார். குன்றத்தூரை அடைந்ததும் நடிகையை ஒரு வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர்.
பலாத்காரம்
அந்த வீட்டில் வைத்து 3 ஆண்கள் கத்திமுனையில் அந்த நடிகையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த கொடூரத்தை அவர்கள் தங்களின் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.
புகார்
போலீசில் புகார் அளித்தால் பலாத்கார வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று அந்த 3 பேரும் மிரட்டியுள்ளனர். நடிகை அணிந்திருந்த ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள தங்க செயின், ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு டாக்சி பிடித்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
தேடல்
நடிகை நேராக காவல் நிலையத்திற்கு சென்று அந்த 3 பேர் மீதும் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த தகவலை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் தேடி வருகிறார்கள்.