Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷாக்கிங்.. 26 வயது இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மரணம்.. சோகத்தில் சாந்தனு
சென்னை: இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா வேலை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லாத நபர் என்றும் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் நடிகர் சாந்தனு தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும், வாழ்க்கை நிலையில்லாத ஒன்று என்றும் கடைசி நேரத்தில் அவர் எனக்கு போன் பண்ணியும் என்னால் எடுக்க முடியவில்லை என நினைக்கும் போது மன வேதனையளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
என் ’உயிரின் உயிரே’ உயிரிழந்து விட்டது.. உடைந்து போன ஹாரிஸ் ஜெயராஜ்.. உருக்கமான பதிவு!
ராமகிருஷ்ணா உயிரிழப்பு
சினிமாவில் பெரும் இயக்குநராக வளர வேண்டும் என்கிற கனவுடன் இரவு பகல் பாராமல் ஓயாது உழைத்து வந்த இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிரிச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
26 வயது தான்
இளம் உதவி இயக்குநரான ராமகிருஷ்ணாவுக்கு வெறும் 26 வயது தான் ஆகிறது என்றும் ராமகிருஷ்ணா எனது உயிர் நண்பர் என்றும் சாந்தனு பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் மன வேதனையையும் ரசிகர்கள் மத்தியில் பதிவிட்டுள்ளார். வாழ்க்கை நிலையானது அல்ல, எந்த நேரத்தில் என்ன ஆகும் என்றே கணிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் சாந்தனு.
கெட்ட பழக்கமே இல்லை
அந்த இளம் இயக்குநருக்கு எந்தவொரு கெட்டப் பழக்கமும் இருந்தது கிடையாது. ஆனால், வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார் என்றும் தேவையில்லாத ஹேட்ரட்களையும் நெகட்டிவிட்டிகளையும் யாரும் பரப்ப வேண்டாம் என சாந்தனு கேட்டுக் கொண்டார்.
போன் எடுக்க முடியல
ராமகிருஷ்ணா உயிரிழப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கடைசியாக எனக்கு போன் பண்ணியிருந்தார். ஆனால், என்னால் அந்த போன் காலை எடுக்க முடியவில்லையே என ரொம்பவே மன வேதனையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார் சாந்தனு.
மன அழுத்தம் தான் காரணம்
இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கும் THE BIGGEST CULPRIT-ஏ மன அழுத்தம் தான். அதனால் தான் அந்த இளம் இயக்குநர் உயிரிழந்துள்ளார் என சாந்தனு கூறியுள்ளார். ஈகோ மற்றும் நெகட்டிவிட்டியை தூக்கி எறியுங்கள் நண்பர்களே என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் சாந்தனு தற்போது இராவணக் கோட்டம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.