வாளமீன் பாடலில் நடித்த இளம் காமெடியன் முத்துராஜா மரணம்!

அதில் கானா பாட்டுப் பாடும் உலகநாதனுக்குப் பிறகு, அத்தனைப் பேர் கவனத்தையும் கவர்ந்தவர் உலகநாதனுக்கு மைக் பிடித்தபடி திறந்த விழி மூடாமல் வரும் இளைஞன். பெயர் முத்துராஜா. அந்தப் படத்துக்குப் பிறகு மள மளவென எக்கச்சக்க படங்களில் சிரிப்பு மூட்டிய அந்த இளம் நகைச்சுவை நடிகர் நேற்று இரவு மரணமடைந்துவிட்டார்.
களவாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த முத்துராஜாவுக்கு கடந்த மாதம்தான் தேனி கேகே பட்டியில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து, மனைவியுடன் கே.கே. பட்டியில் தங்கி இருந்தார். இரு தினங்களுக்கு முன் வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். உடனடியாக அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று சொந்த ஊரில் நடக்கிறது.


Click it and Unblock the Notifications











