Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்: இலியானா
மும்பை: சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த பல இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்பதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.
டோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலான இலியானாவுக்கு அங்கு மவுசு இல்லை. இருப்பினும் மும்பையிலேயே தங்கி கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறுகையில்,
சினிமா
சினிமா எனக்கு உயிர் போன்று. ஆனால் அதில் மூழ்கிவிடாதே என்று இதயம் கூறுகிறது. இதயம் சொல்வதையே கேட்க விரும்புகிறேன். சினிமா தான் உலகம் என இருக்க மாட்டேன்.
பெண்கள்
சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று வந்த பல இளம்பெண்கள் நினைத்தது நடக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். அதை எல்லாம் பார்த்து பக்குவப்பட்டுள்ளேன்.
வாய்ப்பு
பட வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதை நினைத்து வருந்த மாட்டேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் 7 ஆண்டு காலம் நிலைத்திரு்தேன்.
வயது
எனக்கு 30 வயது ஆகிறது. வயதை சொல்ல வெட்கப்படவில்லை. அதை மறைத்தும் வைக்க மாட்டேன். வயது வெறும் எண் தான். நீங்கள் பார்ப்பதற்கு 23 வயது பெண் போன்று இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கூறுவதை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.