Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
உடல் நலக் குறைவு.. சிகிச்சை பெற்று வந்த இளம் இசை அமைப்பாளர் திடீர் உயிரிழப்பு.. திரையுலகம் அதிர்ச்சி
சென்னை: இளம் இசையமைப்பாளர் ஒருவர் திடீரென மரணம் அடைந்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது சினிமா துறையினரை கவலையடைய செய்துள்ளது.
இளம் இசை அமைப்பாளர்
இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் பல பிரபலங்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு இல்லாமல் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் இளம் இசை அமைப்பாளர் நவீன் சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இசை ஆல்பங்கள்
நவீன் சங்கர், 'விசிறி' என்ற படத்துக்கு இசை அமைத்துள்ளார். வெற்றி மகாலிங்கம் இயக்கிய இந்தப் படம், 2018 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ராம் சரவணா, ரமோனா ஸ்டெபானி நடித்திருந்தனர். இதன் பாடல்கள் கவனிக்கப்பட்ட நிலையில் சில இசை ஆல்பங்களுக்கு பணி புரிந்து வந்தார் நவீன் சங்கர்.
விமலின் சோழநாட்டான்
ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் விமல் நடிக்கும் சோழநாட்டான் என்ற வரலாற்றுப் படத்துக்கும் இசை அமைக்க இருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் நிலைப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேரில் அஞ்சலி
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் கடந்த 31 ஆம் தேதி உயிரிழந்தார். இளம் இசை அமைப்பாளர் ஒருவர் திடீரென மரணமடைந்திருப்பது, சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர் உடலுக்கு சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பலர் சோசியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா இல்லை
பாடகி சவுந்தர்யா பாலா நந்தகுமார், நவீன் சங்கரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தியை நம்பவே முடியவில்லை. உங்களின் ஆத்மா அமைதி அடையட்டும் என்று கூறியுள்ளார். அவர் கொரோனா பாதிப்பால் மரணமடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.