Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உடல் நலக் குறைவு.. சிகிச்சை பெற்று வந்த இளம் இசை அமைப்பாளர் திடீர் உயிரிழப்பு.. திரையுலகம் அதிர்ச்சி
சென்னை: இளம் இசையமைப்பாளர் ஒருவர் திடீரென மரணம் அடைந்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது சினிமா துறையினரை கவலையடைய செய்துள்ளது.
இளம் இசை அமைப்பாளர்
இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் பல பிரபலங்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு இல்லாமல் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் இளம் இசை அமைப்பாளர் நவீன் சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இசை ஆல்பங்கள்
நவீன் சங்கர், 'விசிறி' என்ற படத்துக்கு இசை அமைத்துள்ளார். வெற்றி மகாலிங்கம் இயக்கிய இந்தப் படம், 2018 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ராம் சரவணா, ரமோனா ஸ்டெபானி நடித்திருந்தனர். இதன் பாடல்கள் கவனிக்கப்பட்ட நிலையில் சில இசை ஆல்பங்களுக்கு பணி புரிந்து வந்தார் நவீன் சங்கர்.
விமலின் சோழநாட்டான்
ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் விமல் நடிக்கும் சோழநாட்டான் என்ற வரலாற்றுப் படத்துக்கும் இசை அமைக்க இருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் நிலைப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேரில் அஞ்சலி
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் கடந்த 31 ஆம் தேதி உயிரிழந்தார். இளம் இசை அமைப்பாளர் ஒருவர் திடீரென மரணமடைந்திருப்பது, சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர் உடலுக்கு சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பலர் சோசியல் மீடியாவில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா இல்லை
பாடகி சவுந்தர்யா பாலா நந்தகுமார், நவீன் சங்கரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தியை நம்பவே முடியவில்லை. உங்களின் ஆத்மா அமைதி அடையட்டும் என்று கூறியுள்ளார். அவர் கொரோனா பாதிப்பால் மரணமடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.