Don't Miss!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இளம் பாடகர் சுட்டுக் கொலை: காதல் பிரச்சனை காரணமா?
சண்டிகர்: பஞ்சாபில் வளர்ந்து வரும் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் நவ்ஜோத் சிங்(22). வளர்ந்து வரும் பாடகரான அவர் சண்டிகர் அருகே உள்ள எஸ்.ஏ.எஸ். நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
போலீஸ்
தேரா பஸ்ஸி பகுதியில் நவ்தீப் சிங் உடம்பில் 5 குண்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கார்
நவ்தீப் சிங்கை யாரோ அருகில் இருந்து சுட்டுள்ளனர். அவரின் நிஸ்ஸான் மைக்ரா கார் அவரது உடல் கிடந்த இடத்திற்கு அருகில் நின்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடைய பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. தொழில் பகை இருப்பதாகவும் தெரியவில்லை.
கிராமம்
நவ்தீவ் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது தாய்க்கு போன் செய்து தனது சொந்த ஊரான பெஹ்ரா கிராமத்திற்கு திரும்பி வருவதாக தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி வராததால் குடும்பத்தார் அவரை தேட ஆரம்பித்தனர்.
காதல்
நவ்தீப் சிங் மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு அருகே ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்ததை அவரது உறவினர் பார்த்துள்ளார். காதல் விவகாரம் தொடர்பாக நவ்தீப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.