ரசிகர் கேட்டதற்காக இப்படியா...பிகினி ஃபோட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை
சென்னை : மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தமிழ் டிவி சீரியல் நடிகையான பிரியங்கா ஜெயின். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி சமீபத்தில் பேசிக் கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் பிகினி ஃபோட்டோக்களை வெளியிடுமாறு கேட்டுள்ளார். ரசிகரின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, கடற்கரையில் பிகினியில் இருக்கும் ஃபோட்டோக்களை பிரியங்கா வெளியிட்டு, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

பிரியங்கா ஜெயின், விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் 'காற்றின் மொழி' சீரியலில் கண்மணி என்ற ரோலில், பாவாடை - தாவணியில் மிகவும் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பாரம்பரிய உடைகளான புடவை, பாவாடை தாவணி மட்டுமே அணிந்து வருவார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் மாடர்ன் உடைகளை அணிந்து, வித விதமாக போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை பிரியங்கா தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
அப்படி பார்த்த பிரியங்காவை, திடீரென பிகினியில் பார்த்ததும் ரசிகர்களை அதிர்ச்சியாகி விட்டனர். இருந்தாலும் அவரின் பீச் ஃபோட்டக்களுக்கும் லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











