Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பி.வாசுவின் மருமகளிடம் தகாத முறையில் பேசி சீண்டிய வாலிபர் கைது
சென்னை: இயக்குநர் பி.வாசுவின் மருமகளான, நடிகர் சக்தியின் மனைவியிடம் தகாத முறையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஜாகிர் உசேன். 27 வயதான இவர் திரைப்படத்துறையில் உள்ளவர். வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் சக்தியின் மனைவியிடம் சில்மிஷம் செய்தததற்காக தற்போது கைதாகியுள்ளார்.
இயக்குநர் பி.வாசுவின் மகனான சக்தி, பல படங்களில் நடித்துள்ளார். தனது குடும்பத்துடன் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வசித்து வருகிறார்.
சக்தியின் மனைவி வெளியில் போகும்போதெல்லாம் இந்த ஜாகிர் உசேன் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸாரும் ஜாகிர் உசேனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் வெளியில் வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் தனது வேலையைக் காட்டியுள்ளார் ஜாகிர் உசேன். இதையடுத்து சக்தியின் மனைவி அபிராமபுரம் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது குழந்தையை ஆழ்வார் பேட்டையில் உள்ள பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக காரில் சென்ற போது, ஜாகிர் உசேன் பின்னால் தொடர்ந்து வந்து, தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜாகிர் உசேனை மீண்டும் கைது செய்தனர். இந்த சம்பவம் திரைத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.