Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
கையெடுத்துக் கும்பிடுறேன்.. தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்க.. சிவக்குமார் அதிரடி
அனைவரும் காதல் கல்யாணம் பண்ண வேண்டும். இன்னும் 10 வருடத்தில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்யும முறையே இல்லாமல் போய் விடும் என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: இளைஞர்களே கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கறேன். தயவு செய்து எல்லோரும் காதல் கல்யாணம் பண்ணுங்கப்பா. பண்ணிட்டு நல்லா வாழுங்கப்பா என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.
நடிகர் சிவக்குமாருக்கு 75 வயதாகிறது இதையொட்டி இன்று சென்னையில் அவர் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சிவக்குமார். அப்போது அவர்களிடையே சிவக்குமார் பேசுகையில் உற்சாகத்துடன் காதல் குறித்துப் பேசினார்.
சிவக்குமார் கூறியதிலிருந்து...
பல ஜோடிகளை சேர்ப்பதும் நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்), பிரிப்பதும் நீங்கள்தான் . என் பையனுக்குக் கூட நீங்கதான் கல்யாணம் பண்ணி வச்சீங்க (சூர்யா -ஜோதிகாவைச் சொல்கிறார்). கெமிஸ்ட்ரி நல்லாருக்கு, ஜோடிப் பொருத்தம் நல்லாருக்குன்னு எழுதுனீங்க.
அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இப்போ நல்லாருக்காங்க, சந்தோஷமா இருக்காங்க. இன்னும் பத்து வருஷத்தில் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் அரேன்ஜ்ட் மேரேஜே இருக்காது. எல்லாமே காதல் கல்யாணமாதான் இருக்கும்.
தாராளமா காதல் கல்யாணம் பண்ணிக்குங்க. பண்ணிட்டு 40-50 வருஷம் சேர்ந்து வாழுங்க. அப்போதுதான் அது காதலுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். சேர்ந்து வாழ்வதைப் பொறுத்தே காதலும் வெற்றி அடையும்.
உங்கள் மூலமாக அனைவரையும், இளைஞர்களை கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து காதல் கல்யணம் பண்ணிக்கங்கப்பா. பண்ணிட்டு நல்லா இருங்கப்பா என்று கூறினார் சிவக்குமார்.