Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ.. மை பூசி விளாசிய சினிமா டப்பிங் கலைஞர்.. யூடியூபர் திடீர் கைது!
கொச்சி: தலைமறைவாக உள்ள டிவி நடிகைக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.
கொல்லம் அருகே கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ராம்ஸி(24). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் காதலித்து வந்தனர்.
இது இரண்டு பேர் குடும்பத்துக்கும் தெரிய வந்தபோது, திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர்.
அப்போ எப்படி போஸ் கொடுத்து இருக்கேன் பாருங்க.. ரசிகர்களை திணறவிடும் பிரபல நடிகை! லைக்ஸ் அள்ளுது!
டப்பிங் கலைஞர்கள்
சமீபத்தில், திரைப்பட டப்பிங் கலைஞர்கள், மகளிர் செயற்பாட்டாளர்கள் குறித்து ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மூத்த டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி, சமூக செயற்பாட்டாளர் தியா சனா மற்றும் சிலர், கடந்த சனிக்கிழமை விஜய் பி.நாயர் அலுவலகம் நடத்தி வந்த லாட்ஜூக்கு சென்றனர்.
யூட்யூபில் வெளியீடு
அவர் மீது கருப்பு மை ஊற்றி, அடித்து உதைத்தனர். அவர் கைகளாலேயே, அவர் பதிவிட்ட வீடியோக்களை அழிக்க வைத்தனர். பின்னர் மன்னிப்பு கேட்க வைத்து அதை யூட்யூபில் வெளியிட்டனர். இது கேரளாவில் பரபரப்பானது. இதையடுத்து தன்னை அடித்து உதைத்து செல்போன், லேப்டாப், ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதாக விஜய் பி. நாயர் புகார் கொடுத்தார்.
பெண்களை ஆபாசமாக
இதையடுத்து பாக்கியலட்சுமி உள்ளிட்ட 3 பெண்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரம் பெண்களை ஆபாசமாக பேசி பதிவிட்ட விஜய் பி நாயர் மீது ஜாமீனில் வரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பினராயி விஜயன்
இந்நிலையில், விஜய் பி நாயரை தாக்கியவர்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
விஜய் பி நாயர் கைது
கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா, பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய விஜய் பி நாயரின் செயல் மோசமானது. அவரைத் தட்டிக்கேட்ட பெண்களை பாராட்டுகிறேன். அவர்கள் எதிர்ப்பு முறையில் உள்ள தவறு பற்றி பின்னர் சிந்திப்போம். இதுபோன்ற சேனல்களை ஆதரிக்கக் கூடாது என்றார்.
ஜாமீனில் வர முடியாத
இந்நிலையில், விஜய் பி நாயர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே விஜய் பி நாயர் தனது பெயருக்கு முன் டாக்டர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பிஎச்டி முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அது போலி என்று கூறப்படுகிறது.