Don't Miss!
- News EVM ஓட்டுகளை VVPAT ஸ்லிப் உடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு: விசாரிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தர்மதுரைக்கு ஒரே நாளில் பாட்டு... சீனு ராமசாமியை நெகிழ வைத்த யுவன்!
எடுத்த இடம் பொருள் ஏவல் இன்னும் வெளியாகவில்லையே என்ற கவலை இருந்தாலும், நம்பிக்கையுடன் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் சீனு ராமசாமி.
இப்போது அவர் உருவாக்கும் புதிய படம் தர்மதுரை. இடம் பொருள் ஏவலுக்கு இசையமைத்த அதே யுவன் சங்கர் ராஜா- பாடல் எழுதிய வைரமுத்து கூட்டணி இதிலும் தொடர்கிறது.
இந்தப் படத்துக்கு ஒரே நாளில் மொத்தப் பாடல்களுக்கும் ட்யூன் போட்டுக் கொடுத்து அசத்தியிருக்கிறார் யுவன்.
அதுகுறித்து பேஸ்புக்கில் சீனு ராமசாமி இப்படி எழுதியிருக்கிறார்.
"அவரிடம் பாடல் வருவதற்கு கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்வார் ஆனால் நீங்கள் விரைந்து படத்தை எடுத்து முடிக்க திட்டமிடுகிறீர்கள்.... என்றெல்லாம் அறிவுரைகள் தரப்பட்டது. தர்மதுரை படத்தின் கதையை சொல்லிவிட்டு வந்த ஒரே வாரத்தில் நேற்று தனது வள்ளூவர் கோட்ட அலுவலகத்திலிருந்த்து நணபர் இசைஞர் யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஒரே வீச்சில் திரைக்கதையின் தேவையை பூர்த்தி செய்யும் அனைத்து பாடல்களையும் நிறைவு செய்தார் யுவன், கம்போசிங் செய்த டியூன்கள் கேட்டு விட்டு நெகிழ்ச்சிப் பூக்களை தூவினார் பாட்டுத்திலகம் கவிஞர் வைரமுத்து.
"மாம்ஸ் ரொம்ப இம்பாக்டா இருக்கு மாம்ஸ்..." என்று சந்தோஷித்தார் அருமை தயாரிப்பாளர், தாரைத்தபட்டை திரைப்பட அறிமுக நடிகர், ஸடுடியோ நைன் சுரேஷ், ட்யூன்களைத் திரும்பத் திரும்பக் கேட்டபடி மிதந்திருந்தேன்.
வள்ளுவர் கோட்டத் தேர் நகரத் தொடங்கியது. உயிர்பெற்ற குதிரைகளின் கணைப்பொலி ஆழ் மனதில் கேட்கத் தொடங்கியது. நண்பர் யுவன் அத்தேரில் அமர்ந்திருந்தார்!"