Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'சேதுபதி' இயக்குநர் படத்தில் விஜய் சேதுபதியோடு இணையும் ஹீரோயின்!
Recommended Video
சென்னை : விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை 'சேதுபதி' படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அஞ்சலி. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் அஞ்சலி. தற்போது இரண்டாவது முறையாக இன்னொரு படத்திலும் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை அருண் குமார் இயக்குகிறார்.
'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கியவர் அருண் குமார். இந்த இரண்டு படங்களிலுமே விஜய் சேதுபதி தான் ஹீரோ. தற்போது மூன்றாவது முறையாகவும் விஜய் சேதுபதியைத்தான் இயக்குகிறார் அருண் குமார்.
'பண்ணையாரும் பத்மினியும்' படம் சரியாகப் போகாவிட்டாலும், 'சேதுபதி' படம் செம வரவேற்பு பெற்றது. ரொமான்ஸ், சென்டிமென்ட் கலந்த ஆக்ஷன் ஹீரோவாக அசத்திய விஜய் சேதுபதிக்கு இந்தப் படத்தின் மூலம் பெண் ரசிகைகளும் உருவாகினர்.
மே மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. மலேசியா, தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்த கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.